பாட்டு முதல் குறிப்பு
சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும்
கண்டமை எதிர்ப்பட்டார் சொல்லி, ஆற்றுவித்தது
89.
நண்ணி, நீர் சென்மின்; நமர் அவர் ஆபவேல்,
எண்ணிய எண்ணம் எளிதுஅரோ, எண்ணிய
வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன்; கண்டாளாம்,
தண்சுடர் அன்னாளை, தான்.
உரை