'பருவம் அன்று' என்று வற்புறுத்திய தோழிக்குத் தலைமகள்
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது
98. வீயும்-வியன் புறவின் வீழ் துளியான், மாக் கடுக்கை;
நீயும் பிறரொடும் காண், நீடாதே;-ஆயும்
கழல் ஆகி, பொன் வட்டு ஆய், தார் ஆய், மடல் ஆய்,
குழல் ஆகி, கோல் சுரியாய், கூர்ந்து.