பாட்டு முதல் குறிப்பு
பிரிவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
22.
கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்
உள்ளம் பிரிந்தமை நீ அறிதி;-ஒள்ளிழாய்!-
தொல்லை விடரகம் நீந்திப் பெயர்ந்து, அவர்
வல்லை நாம் காணும் வரவு.
உரை