'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு,
'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
23. சிலை ஒலி வெங் கணையர், சிந்தியா நெஞ்சின்
கொலை புரி வில்லொடு கூற்றுப்போல், ஓடும்
இலை ஒலி வெங் கானத்து, இப் பருவம் சென்றார்
தொலைவு இலர்கொல்-தோழி!-நமர்?