வாயிலாகிய பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது
41. பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப, என் உடையை?
அஃது அன்று எனினும், அறிந்தேம் யாம் செய்தி
நெறியின்,-இனிய சொல் நீர் வாய் மழலைச்
சிறுவன் எமக்கு உடைமையால்.