பாட்டு முதல் குறிப்பு
1.
நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல்,-இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து.
உரை