114. தெற்ற ஒருவரைத் தீது உரை கண்டக்கால்,
இற்றே அவரைத் தெளியற்க; மற்றவர்
யாவரே வேண்டினும், நன்கு ஒழுகார்;-கைக்குமே,
தேவரே தின்னினும் வேம்பு.