216. அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்,
‘இடம் கண்டு அறிவாம்’ என்று எண்ணி இராஅர்;-
மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர்
கடம் கொண்டும் செய்வர் கடன்.