41. வெள்ளம் வருங்காலை ஈர்ப்படுக்கும்; அஃதேபோல்,
கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்;-
ஒள் அமர்க் கண்ணாய்!-ஒளிப்பினும், உள்ளம்
படர்ந்ததே கூறும், முகம்.