21. இளமை கழியும்; பிணி, மூப்பு, இயையும்;
வளமை, வலி, இவை வாடும்; உள நாளால்,
பாடே புரியாது,-பால் போலும் சொல்லினாய்!-
வீடே புரிதல் விதி.