28. மை ஏர் தடங் கண் மயில் அன்ன சாயலாய்!-
மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; பொய்யே,
குறளை, கடுஞ் சொல், பயன் இல் சொல், நான்கும்
மறலையின் வாயினவாம், மற்று.