செல்வம் நிலையாமை
 
1. அறு சுவை உண்டி, அமர்ந்து, இல்லாள் ஊட்ட,
மறு சிகை நீக்கி உண்டாரும், வறிஞராய்ச்
சென்று இரப்பர் ஓர் இடத்துக் கூழ் எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று.
உரை
   
2. துகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக்கால் தொட்டு
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க-
அகடு உற யார் மாட்டும் நில்லாது. செல்வம்
சகடக்கால் போல வரும்!
உரை
   
3. யானை எருத்தம் பொலிய, குடை நிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும், ஏனை
வினை உலப்ப, வேறு ஆகி வீழ்வர், தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
உரை
   
4. 'நின்றன நின்றன நில்லா' என உணர்ந்து,
ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க-
சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து, உடன்
வந்தது வந்தது, கூற்று!
உரை
   
5. என்னானும் ஒன்று தம் கையுறப் பெற்றக்கால்,
பின் ஆவது என்று பிடித்து இரார், முன்னே
கொடுத்தார் உயப் போவர்-கோடு இல் தீக் கூற்றம்.
தொடுத்து ஆறு செல்லும் சுரம்.
உரை
   
6. இழைத்த நாள் எல்லை இகவா; பிழைத்து ஒரீஇ,
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை;-ஆற்றப்
பெரும் பொருள் வைத்தீர்!-வழங்குமின்; நாளைத்
'தழீஇம் தழீஇம்' தண்ணம் படும்.
உரை
   
7. தோற்றம் சால் ஞாயிறு நாழியா, வைகலும்
கூற்றம் அளந்து, நும் நாள் உண்ணும்; ஆற்ற
அறம் செய்து அருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும், பிறவாதாரில்.
உரை
   
8. 'செல்வர் யாம்!' என்று தாம் செல்வுழி எண்ணாத
புல்லறிவாளர் பெருஞ் செல்வம், எல்லில்
கருங் கொண்மூ வாய் திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கு அறக் கெட்டுவிடும்.
உரை
   
9. உண்ணான், ஒளி நிறான், ஓங்கு புகழ் செய்யான்,
துன்னு அருங் கேளிர் துயர் களையான், கொன்னே
வழங்கான் பொருள் காத்து இருப்பானேல், 'அஆ!
இழந்தான்' என்று எண்ணப்படும்.
உரை
   
10. உடாஅதும், உண்ணாதும், தம் உடம்பு செற்றும்,
கெடாஅத நல் அறமும் செய்யார், கொடாஅது
வைத்து ஈட்டினார் இழப்பர்;-வான் தோய் மலை நாட!-
உய்த்து ஈட்டும் தேனீக் கரி.
உரை