தொடக்கம் | ||
செல்வம் நிலையாமை
|
||
1. | அறு சுவை உண்டி, அமர்ந்து, இல்லாள் ஊட்ட, மறு சிகை நீக்கி உண்டாரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்துக் கூழ் எனின், செல்வம் ஒன்று உண்டாக வைக்கற்பாற்று அன்று. |
உரை |
2. | துகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக்கால் தொட்டு பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க- அகடு உற யார் மாட்டும் நில்லாது. செல்வம் சகடக்கால் போல வரும்! |
உரை |
3. | யானை எருத்தம் பொலிய, குடை நிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும், ஏனை வினை உலப்ப, வேறு ஆகி வீழ்வர், தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள. |
உரை |
4. | 'நின்றன நின்றன நில்லா' என உணர்ந்து, ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க- சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து, உடன் வந்தது வந்தது, கூற்று! |
உரை |
5. | என்னானும் ஒன்று தம் கையுறப் பெற்றக்கால், பின் ஆவது என்று பிடித்து இரார், முன்னே கொடுத்தார் உயப் போவர்-கோடு இல் தீக் கூற்றம். தொடுத்து ஆறு செல்லும் சுரம். |
உரை |
6. | இழைத்த நாள் எல்லை இகவா; பிழைத்து ஒரீஇ, கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை;-ஆற்றப் பெரும் பொருள் வைத்தீர்!-வழங்குமின்; நாளைத் 'தழீஇம் தழீஇம்' தண்ணம் படும். |
உரை |
7. | தோற்றம் சால் ஞாயிறு நாழியா, வைகலும் கூற்றம் அளந்து, நும் நாள் உண்ணும்; ஆற்ற அறம் செய்து அருளுடையீர் ஆகுமின்; யாரும் பிறந்தும், பிறவாதாரில். |
உரை |
8. | 'செல்வர் யாம்!' என்று தாம் செல்வுழி எண்ணாத புல்லறிவாளர் பெருஞ் செல்வம், எல்லில் கருங் கொண்மூ வாய் திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கு அறக் கெட்டுவிடும். |
உரை |
9. | உண்ணான், ஒளி நிறான், ஓங்கு புகழ் செய்யான், துன்னு அருங் கேளிர் துயர் களையான், கொன்னே வழங்கான் பொருள் காத்து இருப்பானேல், 'அஆ! இழந்தான்' என்று எண்ணப்படும். |
உரை |
10. | உடாஅதும், உண்ணாதும், தம் உடம்பு செற்றும், கெடாஅத நல் அறமும் செய்யார், கொடாஅது வைத்து ஈட்டினார் இழப்பர்;-வான் தோய் மலை நாட!- உய்த்து ஈட்டும் தேனீக் கரி. |
உரை |