இளமை நிலையாமை
 
11. 'நரை வரும்!' என்று எண்ணி, நல் அறிவாளர்
குழவியிடத்தே துறந்தார்; புரை தீரா,
மன்னா இளமை மகிழ்ந்தாரே, கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப்பார்.
உரை
   
12. நட்புநார் அற்றன; நல்லாரும் அஃகினார்;
அற்புத் தளையும் அவிழ்ந்தன; உள் காணாய்;
வாழ்தலின், ஊதியம் என் உண்டாம்? வந்ததே,
ஆழ் கலத்து அன்ன கலுழ்!
உரை
   
13. சொல் தளர்ந்து, கோல் ஊன்றி, சோர்ந்த நடையினர் ஆய்,
பல் கழன்று, பண்டம் பழிகாறும் இல்-செறிந்து
காம நெறி படரும் கண்ணினார்க்கு இல்லையே-
ஏம நெறி படரும் ஆறு.
உரை
   
14. தாழா, தளரா, தலை நடுங்கா, தண்டு ஊன்றா,
வீழா இறக்கும் இவள்மாட்டும், காழ் இலா
மம்மர் கொள் மாந்தர்க்கு அணங்கு ஆகும்-தன் கைக் கோல்
அம்மனைக் கோல் ஆகிய ஞான்று.
உரை
   
15. எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு,
தனக்குத் தாய் நாடியே சென்றாள்; தனக்குத் தாய்
ஆகியவளும் அதுஆனால், தாய்த் தாய்க்கொண்டு,
ஏகும் அளித்து, இவ் உலகு.
உரை
   
16. வெறி அயர் வெங் களத்து வேல்மகன் பாணி
முறி ஆர் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க,
மறி குளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடையாளர்கண் இல்.
உரை
   
17. பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம்
கனி உதிர்ந்து வீழ்ந்தற்று, இளமை; 'நனி பெரிதும்
வேல்-கண்ணள்!' என்று இவளை வெஃகன்மின்; மற்று இவளும்
கோல்-கண்ணள் ஆகும், குனிந்து.
உரை
   
18. 'பருவம் எனைத்து உள? பல்லின் பால் ஏனை?
இரு சிகையும் உண்டீரோ?' என்று, வரிசையால்
உள் நாட்டம் கொள்ளப்படுதலால், யாக்கைக் கோள்
எண்ணார், அறிவுடையார்.
உரை
   
19. 'மற்று அறிவாம் நல் வினை; யாம் இளையம்' என்னாது,
கைத்து உண்டாம் போழ்தே, கரவாது, அறம் செய்ம்மின்!-
முற்றி இருந்த கனி ஒழிய, தீ வளியால்
நல் காய் உதிர்தலும் உண்டு!
உரை
   
20. ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால்,
தோள்கோப்புக் காலத்தால் கொண்டு உய்ம்மின்; பீள் பிதுக்கிப்
பிள்ளையைத் தாய் அலறக் கோடலால், மற்று அதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.
உரை