தொடக்கம் | ||
யாக்கை நிலையாமை
|
||
21. | மலைமிசைத் தோன்றும் மதியம்போல், யானைத் தலைமிசைக் கொண்ட குடையர், நிலமிசைத் துஞ்சினார் என்று எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால், எஞ்சினார் இவ் உலகத்து இல். |
உரை |
22. | வாழ்நாட்கு அலகா, வயங்கு ஒளி மண்டிலம் வீழ் நாள் படாஅது எழுதலால், வாழ்நாள் உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின்; யாரும் நிலவார், நிலமிசை மேல். |
உரை |
23. | 'மன்றம் கறங்க மணப் பறை ஆயின, அன்று அவர்க்கு ஆங்கே, பிணப் பறை ஆய், பின்றை ஒலித்தலும் உண்டாம்' என்று, உய்ந்துபோம் ஆறே வலிக்குமாம்-மாண்டார் மனம். |
உரை |
24. | சென்றே எறிப ஒருகால்; சிறு வரை நின்றே எறிப, பறையினை; நன்றேகாண், முக் காலைக் கொட்டினுள், மூடி, தீக் கொண்டு எழுவர், செத்தாரைச் சாவார் சுமந்து! |
உரை |
25. | கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலற, பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும், மணம் கொண்டு, ஈண்டு, 'உண்டு, உண்டு, உண்டு' என்னும் உணர்வினான்-சாற்றுமே, 'டொண் டொண் டொண்' என்னும் பறை. |
உரை |
26. | நார்த் தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து அடக்கில் என்? பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்?- தோற்பையுள்நின்று, தொழில் அறச் செய்து ஊட்டும் கூத்தன் புறப்பட்டக்கால். |
உரை |
27. | 'படு மழை மொக்குளின் பல் காலும் தோன்றி, கெடும், இது ஓர் யாக்கை' என்று எண்ணி, 'தடுமாற்றம் தீர்ப்பேம் யாம்' என்று உணரும் திண் அறிவாளரை நேர்ப்பார் யார், நீள் நிலத்தின்மேல்? |
உரை |
28. | யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர், தாம் பெற்ற யாக்கையால் ஆய பயன் கொள்க-யாக்கை மலை ஆடும் மஞ்சுபோல் தோன்றி, மற்று ஆங்கே நிலையாது நீத்துவிடும்! |
உரை |
29. | 'புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை' என்று எண்ணி, இன்னினியே செய்க அறவினை-'இன்னினியே நின்றான், இருந்தான், கிடந்தான், தன் கேள் அலறச் சென்றான்' எனப்படுதலால்! |
உரை |
30. | கேளாதே வந்து, கிளைகளாய் இல் தோன்றி, வாளாதே போவரால், மாந்தர்கள்-வாளாதே. சேக்கை மரன் ஒழியச் சேண் நீங்கு புள் போல, யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து. |
உரை |