அறன் வலியுறுத்தல்
 
31. 'அகத்து ஆரே வாழ்வார்?' என்று அண்ணாந்து நோக்கி,
புகத் தாம் பெறாஅர், புறங்கடை பற்றி,
மிகத் தாம் வருந்தியிருப்பரே-மேலைத்
தவத்தால் தவம் செய்யாதார்.
உரை
   
32. 'ஆவாம் நாம், ஆக்கம் நசைஇ; அறம் மறந்து,
போவாம் நாம்' என்னா,-புலை நெஞ்சே!-ஓவாது
நின்று உஞற்றி வாழ்தி எனினும், நின் வாழ்நாள்கள்
சென்றன; செய்வது உரை.
உரை
   
33. வினைப் பயன் வந்தக்கால், வெய்ய உயிரா,
மனத்தின் அழியுமாம், பேதை; நினைத்து, அதனைத்
தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்து ஒருவுவார்.
உரை
   
34. அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்,
பெரும் பயனும் ஆற்றவே கொள்க!-கரும்பு ஊர்ந்த
சாறுபோல் சாலவும் பின் உதவி, மற்று அதன்
கோதுபோல் போகும், உடம்பு!
உரை
   
35. கரும்பு ஆட்டி, கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார்;-
வருந்தி உடம்பின் பயன் கொண்டார், கூற்றம்
வருங்கால் பரிவது இலர்.
உரை
   
36. 'இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்?' என்னாது,
'பின்றையே நின்றது கூற்றம்' என்று எண்ணி,
ஒருவுமின், தீயவை; ஒல்லும் வகையால்
மருவுமின், மாண்டார் அறம்.
உரை
   
37. மக்களால் ஆய பெரும் பயனும், ஆயுங்கால்,
எத்துணையும் ஆற்றப் பலஆனால், தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது, உம்பர்க்
கிடந்து உண்ணப் பண்ணப்படும்.
உரை
   
38. உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி,
இறப்ப நிழல் பயந்தாஅங்கு, அறப்பயனும்,
தான் சிறிதுஆயினும், தக்கார் கைப் பட்டக்கால்,
வான் சிறிதாப் போர்த்துவிடும்.
உரை
   
39. வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார்,
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்.
உரை
   
40. மான அருங் கலம் நீக்கி, இரவு என்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து, இவ் உடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்!
உரை