தொடக்கம் | ||
தூய்தன்மை
|
||
41. | 'மாக் கேழ் மட நல்லாய்!' என்று அரற்றும் சான்றவர் நோக்கார்கொல், நொய்யது ஓர் துச்சிலை? யாக்கைக்கு ஓர் ஈச் சிறகு அன்னது ஓர் தோல் அறினும், வேண்டுமே, காக்கை கடிவது ஓர் கோல்! |
உரை |
42. | தோற் போர்வைமேலும் துளை பலவாய், பொய்ம் மறைக்கும் மீப் போர்வை மாட்சித்து, உடம்பு; ஆனால், மீப் போர்வை பொய்ம் மறையா, காமம் புகலாது, மற்று அதனைப் பைம் மறியாப் பார்க்கப்படும். |
உரை |
43. | தக்கோலம் தின்று, தலை நிறையப் பூச் சூடி, பொய்க் கோலம் செய்ய, ஒழியுமே-'எக்காலும் உண்டி வினையுள் உறைக்கும்' எனப் பெரியோர் கண்டு, கைவிட்ட மயல்? |
உரை |
44. | 'தெள் நீர்க் குவளை, பொரு கயல், வேல்' என்று, கண் இல் புன்மாக்கள் கவற்ற, விடுவெனோ- உள் நீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டன்ன கண் நீர்மை கண்டு ஒழுகுவேன்? |
உரை |
45. | 'முல்லை முகை, முறுவல், முத்து' என்று இவை பிதற்றும் கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவெனோ- எல்லாரும் காண, புறங்காட்டு உதிர்ந்து உக்க பல்-என்பு கண்டு ஒழுகுவேன்? |
உரை |
46. | குடரும், கொழுவும், குருதியும், என்பும், தொடரும் நரம்பொடு தோலும், இடையிடையே வைத்த தடியும், வழும்பும், ஆம் மற்று இவற்றுள் எத் திறத்தாள், ஈர்ங் கோதையாள்? |
உரை |
47. | ஊறி, உவர்த்தக்க ஒன்பது வாய்ப் புலனும் கோதிக் குழம்பு அலைக்கும் கும்பத்தை, பேதை, 'பெருந்தோளி! பெய்வளாய்!' என்னும்-மீப் போர்த்த கருந் தோலால் கண் விளக்கப்பட்டு. |
உரை |
48. | பண்டம் அறியார், படு சாந்தும் கோதையும் கண்டு, பாராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப் பெடைச் சேவல் வன் கழுகு பேர்த்து இட்டுக் குத்தல், முடைச் சாகாடு அச்சு இற்றுழி? |
உரை |
49. | கழிந்தார் இடு தலை, கண்டார் நெஞ்சு உட்க, குழிந்து ஆழ்ந்த கண்ணவாய்த் தோன்றி, ஒழிந்தாரை, 'போற்றி நெறி நின்மின்; இற்று, இதன் பண்பு' என்று சாற்றும்கொல், சாலச் சிரித்து! |
உரை |
50. | உயிர் போயார் வெண் தலை உட்கச் சிரித்து, செயிர் தீர்க்கும், செம்மாப்பவரை; செயிர் தீர்ந்தார் கண்டு, 'இற்று, இதன் வண்ணம்' என்பதனால், தம்மை ஓர் பண்டத்துள் வைப்பது இலர். |
உரை |