துறவு
 
51. விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு, ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம்; விளக்கு நெய்
தேய்விடத்துச் சென்று இருள் பாய்ந்தாங்கு, நல் வினை
தீர்விடத்து நிற்குமாம், தீது.
உரை
   
52. நிலையாமை, நோய், மூப்பு, சாக்காடு, என்று எண்ணி,
தலையாயார் தம் கருமம் செய்வார்; தொலைவு இல்லாச்
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.
உரை
   
53. இல்லம், இளமை, எழில், வனப்பு, மீக்கூற்றம்,
செல்வம், வலி, என்று இவை எல்லாம், மெல்ல,
நிலையாமை கண்டு, நெடியார், துறப்பர்-
தலையாயார்-தாம் உய்யக் கொண்டு.
உரை
   
54. துன்பம் பல நாள் உழந்தும், ஒரு நாளை
இன்பமே காமுறுவர், ஏழையார்; இன்பம்
இடை தெரிந்து, இன்னாமை நோக்கி, மனை ஆறு
அடைவு ஒழிந்தார், ஆன்று அமைந்தார்.
உரை
   
55. கொன்னே கழிந்தன்று இளமையும்! இன்னே
பிணியொடு மூப்பும் வருமால்;-துணிவு ஒன்றி,
என்னொடு சூழாது, எழுநெஞ்சே!-போதியோ,
நல் நெறி சேர, நமக்கு?
உரை
   
56. 'மாண்ட குணத்தொடு மக்கட் பேறு இல் எனினும்,
பூண்டான் கழித்தற்கு அருமையால், பூண்ட
மிடி என்னும் காரணத்தின், மேன்முறைக்கண்ணே
கடி' என்றார், கற்று அறிந்தார்.
உரை
   
57. ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய,
தாக்கு அருந் துன்பங்கள் தாம் தலைவந்தக்கால்,
நீக்கி, நிறூஉம் உரவோரே, நல் ஒழுக்கம்
காக்கும் திருவத்தவர்.
உரை
   
58. தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி, 'மற்று
எம்மை இகழ்ந்த வினைப் பயத்தான், உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்!' என்று
பரிவதூஉம், சான்றோர் கடன்.
உரை
   
59. மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பேர் பெற்ற
ஐ வாய வேட்கை அவாவினை, கைவாய்,
கலங்காமல் காத்து, உய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்.
உரை
   
60. துன்பமே மீதூரக் கண்டும், துறவு உள்ளார்,
இன்பமே காமுறுவர், ஏழையார்; இன்பம்
இசைதொறும், மற்று அதன் இன்னாமை நோக்கி,
பசைதல் பரியாதாம், மேல்.
உரை