தொடக்கம் | ||
சினம் இன்மை
|
||
61. | மதித்து இறப்பாரும் இறக்க! மதியார், மிதித்து இறப்பாரும் இறக்க! மிதித்து ஏறி, ஈயும் தலைமேல் இருத்தலால், அஃது அறிவார் காயும் கதம் இன்மை நன்று. |
உரை |
62. | தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரைத் தாங்காது, கண்டுழி எல்லாம் துறப்பவோ-மண்டி, அடி பெயராது, ஆற்ற இளி வந்த போழ்தின் முடிகிற்கும் உள்ளத்தவர்? |
உரை |
63. | காவாது, ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் ஓவாதே தம்மைச் சுடுதலால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார், எஞ் ஞான்றும், காய்ந்து அமைந்த சொல்லார், கறுத்து. |
உரை |
64. | நேர்த்து, நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால், வேர்த்து வெகுளார், விழுமியோர்; ஓர்த்து அதனை, உள்ளத்தான் உள்ளி, உரைத்து, உராய், ஊர் கேட்ப, துள்ளி, தூண் முட்டுமாம், கீழ். |
உரை |
65. | இளையான் அடக்கம் அடக்கம்; கிளை பொருள் இல்லான் கொடையே கொடைப் பயன்; எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை. |
உரை |
66. | கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல் எல்லாரும் காணப் பொறுத்து, உய்ப்பர்-ஒல்லை, இடு நீற்றால் பை அவிந்த நாகம்போல், தம்தம் குடிமையான் வாதிக்கப்பட்டு. |
உரை |
67. | மாற்றாராய் நின்று, தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை, 'ஆற்றாமை' என்னார், அறிவுடையார்; ஆற்றாமை நேர்த்து, இன்னா மற்று அவர் செய்தக்கால், தாம் அவரைப் பேர்த்து இன்னா செய்யாமை நன்று. |
உரை |
68. | நெடுங் காலம் ஓடினும், நீசர் வெகுளி கெடும் காலம் இன்றிப் பரக்கும்; அடும் காலை நீர் கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர் கொண்ட சான்றோர் சினம். |
உரை |
69. | உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும், உபகாரம் தாம் செய்வது அல்லால், தவற்றினால் தீங்கு ஊக்கல் வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல். |
உரை |
70. | கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும், தம் வாயால் பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை; நீர்த்து அன்றிக் கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால், சொல்பவோ, மேன்மக்கள் தம் வாயால் மீட்டு? |
உரை |