தொடக்கம் | ||
பொறையுடைமை
|
||
71. | கோதை அருவிக் குளிர் வரை நல் நாட! பேதையோடு யாதும் உரையற்க! பேதை, உரைக்கின், சிதைந்து உரைக்கும்; ஒல்லும் வகையால், வழுக்கிக் கழிதலே நன்று. |
உரை |
72. | நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால், மற்று அது தாரித்திருத்தல் தகுதி; மற்று ஓரும் புகழ்மையாக் கொள்ளாது, பொங்கு நீர் ஞாலம் சமழ்மையாக் கொண்டுவிடும். |
உரை |
73. | காதலார் சொல்லும் கடுஞ் சொல், உவந்து உரைக்கும் ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ-போது எலாம் மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப!- ஆவது அறிவார்ப் பெறின்? |
உரை |
74. | அறிவது அறிந்து, அடங்கி, அஞ்சுவது அஞ்சி, உறுவது உலகு உவப்பச் செய்து, பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்புடையார், எஞ் ஞான்றும், துன்புற்று வாழ்தல் அரிது. |
உரை |
75. | வேற்றுமை இன்றிக் கலந்து, இருவர் நட்டக்கால், தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின், ஆற்றும் துணையும் பொறுக்க! பொறான் ஆயின் தூற்றாதே, தூர விடல்! |
உரை |
76. | 'இன்னா செயினும், இனிய ஒழிக! என்று, தன்னையே தான் நோவின் அல்லது, துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல்-கானக நாட! விலங்கிற்கும் விள்ளல் அரிது! |
உரை |
77. | பெரியார் பெரு நட்புக் கோடல், தாம் செய்த அரிய பொறுப்ப என்று அன்றோ? அரியரோ- ஒல்லென் அருவி உயர் வரை நல் நாட!- நல்ல செய்வார்க்குத் தமர்? |
உரை |
78. | வற்றி, மற்று ஆற்றப் பசிப்பினும், பண்பு இலார்க்கு அற்றம் அறிய உரையற்க! அற்றம் மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே, தம்மைத் துறக்கும் துணிவு இலாதார். |
உரை |
79. | இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும், இன்பத்தின் பக்கம் இருந்தைக்க! இன்பம் ஒழியாமை கண்டாலும்-ஓங்கு அருவி நாட!- பழி ஆகா ஆறே தலை. |
உரை |
80. | தான் கெடினும், தக்கார் கேடு எண்ணற்க! தன் உடம்பின் ஊன் கெடினும், உண்ணார் கைத்து உண்ணற்க! வான் கவிந்த வையகம் எல்லாம் பெறினும், உரையற்க, பொய்யோடு இடை மிடைந்த சொல்! |
உரை |