தொடக்கம் | ||
பிறர்மனை நயவாமை
|
||
81. | அச்சம் பெரிதால்; அதற்கு இன்பம் சிற்றளவால்; நிச்சல் நினையுங்கால் கோக் கொலையால்; நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால்;-பிறன் தாரம் நம்பற்க, நாண் உடையார்! |
உரை |
82. | அறம், புகழ், கேண்மை, பெருமை இந் நான்கும் பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா; பிறன் தாரம் நச்சுவார்ச் சேரும், பகை, பழி, பாவம் என்று அச்சத்தோடு இந் நாற் பொருள். |
உரை |
83. | புக்க இடத்து அச்சம்; போதரும் போது அச்சம்; துய்க்கும் இடத்து அச்சம்; தோன்றாமைக் காப்பு அச்சம்; எக் காலும் அச்சம் தருமால்; எவன்கொலோ, உட்கான், பிறன் இல் புகல்? |
உரை |
84. | காணின், குடிப் பழி ஆம்; கையுறின், கால் குறையும்; ஆண் இன்மை செய்யுங்கால், அச்சம் ஆம்; நீள் நிரயத் துன்பம் பயக்குமால்; துச்சாரி! நீ கண்ட இன்பம், எனக்கு, எனைத்தால்? கூறு. |
உரை |
85. | செம்மை ஒன்று இன்றி, சிறியார் இனத்தர் ஆய், கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ, உம்மை, வலியால் பிறர் மனைமேல் சென்றாரே-இம்மை, அலி ஆகி, ஆடி உண்பார். |
உரை |
86. | பல்லார் அறியப் பறை அறைந்து, நாள் கேட்டு, கல்யாணம் செய்து, கடி புக்க மெல் இயல். காதல் மனையாளும் இல்லாளா, என், ஒருவன் ஏதில் மனையாளை நோக்கு? |
உரை |
87. | அம்பல் அயல் எடுப்ப, அஞ்சித் தமர் பரீஇ, வம்பலன் பெண் மரீஇ, மைந்துற்று, நம்பும் நிலைமை இல் நெஞ்சத்தான் துப்புரவு-பாம்பின் தலை நக்கியன்னது உடைத்து. |
உரை |
88. | பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா, உரவோர்கண் காம நோய்,-ஓஒ கொடிதே!- விரவாருள் நாணுப்படல் அஞ்சி, யாதும் உரையாது, உள் ஆறிவிடும். |
உரை |
89. | அம்பும், அழலும், அவிர் கதிர் ஞாயிறும், வெம்பிச் சுடினும், புறம் சுடும்; வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம் அவற்றினும் அஞ்சப்படும். |
உரை |
90. | ஊருள் எழுந்த உரு கெழு செந் தீக்கு நீருள் குளித்தும் உயல் ஆகும்; நீருள் குளிப்பினும், காமம் சுடுமே; குன்று ஏறி ஒளிப்பினும், காமம் சுடும். |
உரை |