தொடக்கம் | ||
ஈகை
|
||
91. | இல்லா இடத்தும், இயைந்த அளவினால் உள்ள இடம்போல் பெரிது உவந்து, மெல்லக் கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு அடையாவாம், ஆண்டைக் கதவு. |
உரை |
92. | முன்னரே, சாம் நாள், முனிதக்க மூப்பு, உள; பின்னரும் பீடு அழிக்கும் நோய் உள; கொன்னே பரவன்மின்; பற்றன்மின்; பாத்து உண்மின்; யாதும் கரவன்மின், கைத்து உண்டாம் போழ்து. |
உரை |
93. | நடுக்குற்றுத் தற் சேர்ந்தார் துன்பம் துடையார்;- கொடுத்துத் தான் துய்ப்பினும், ஈண்டுங்கால் ஈண்டும்; மிடுக்கு உற்றுப் பற்றினும், நில்லாது செல்வம், விடுக்கும் வினை உலந்தக்கால். |
உரை |
94. | இம்மி அரிசித் துணையானும், வைகலும், நும்மில் இயைவ கொடுத்து உண்மின்;-நும்மைக் கொடாஅதவர் என்பர், குண்டு நீர் வையத்து அடாஅ அடுப்பினவர். |
உரை |
95. | மறுமையும் இம்மையும் நோக்கி, ஒருவற்கு உறுமாறு இயைவ கொடுத்தல்! வறுமையால் ஈதல் இசையாதுஎனினும், இரவாமை ஈதல் இரட்டி உறும். |
உரை |
96. | நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க படு பனை அன்னர், பலர் நச்ச வாழ்வார்; குடி கொழுத்தக்கண்ணும், கொடுத்து உண்ணா மாக்கள் இடுகாட்டுள் ஏற்றைப் பனை. |
உரை |
97. | பெயற்பால் மழை பெய்யாக்கண்ணும், உலகம் செயற்பால செய்யாவிடினும்,-கயல் புலால் புன்னை கடியும் பொரு கடல் தண் சேர்ப்ப!- என்னை உலகு உய்யும் ஆறு? |
உரை |
98. | ஏற்ற கை, மாற்றாமை, என்னானும் தாம் வரையாது, ஆற்றதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன்; ஆற்றின்,- மலி கடல் தண் சேர்ப்ப!-மாறு ஈவார்க்கு ஈதல் பொலி கடன் என்னும் பெயர்த்து. |
உரை |
99. | இறப்பச் சிறிது என்னாது, இல் என்னாது, என்றும், அறப்பயன் யார் மாட்டும் செய்க! முறைப் புதவின் ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல், பைய நிறைத்துவிடும். |
உரை |
100. | கடிப்பு இகு கண் முரசம் காதத்தோர் கேட்பர்; இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர்; அடுக்கிய மூஉலகும் கேட்குமே, சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல். |
உரை |