பழவினை
 
101. பல் ஆவுள் உய்த்துவிடினும், குழக் கன்று
வல்லது ஆம், தாய் நாடிக் கோடலை; தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே, தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.
உரை
   
102. உருவும், இளமையும், ஒண் பொருளும், உட்கும்,
ஒரு வழி நில்லாமை கண்டும், ஒரு வழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பு இட்டு
நின்று வீழ்ம் தக்கது உடைத்து.
உரை
   
103. வளம் பட வேண்டாதார் யார்? யாரும் இல்லை;
அளந்தன போகம், அவர் அவர் ஆற்றான்;-
விளங்காய் திரட்டினார் இல்லை; களங் கனியைக்
கார் எனச் செய்தாரும் இல்.
உரை
   
104. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா;
பெறற்பால் அனையவும் அன்ன ஆம்;-மாரி
வறப்பின், தருவாரும் இல்லை; அதனைச்
சிறப்பின், தணிப்பாரும் இல்.
உரை
   
105. தினைத் துணையர் ஆகி, தம் தேசு உள் அடக்கி,
பனைத் துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்தது எவன் உண்டாம், மேலை
வினைப்பயன் அல்லால், பிற?
உரை
   
106. பல் ஆன்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்,
கல்லாதார் வாழ்வது அறிதிரேல்,-கல்லாதார்
சேதனம் என்னும் அச் சேறு அகத்து இன்மையால்
கோது என்று கொள்ளாதாம், கூற்று.
உரை
   
107. இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண,
நெடுங் கடை நின்று உழல்வது எல்லாம்,-அடும்பம்பூ
அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப!-
முன்னை வினை ஆய்விடும்.
உரை
   
108. அறியாரும் அல்லர்; அறிவது அறிந்தும்,
பழியோடு பட்டவை செய்தல்,-வளி ஓடி
நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப!-
செய்த வினையான் வரும்.
உரை
   
109. ஈண்டு நீர் வையத்துள், எல்லாரும், எள்துணையும்
வேண்டார்மன், தீய; விழைபமன், நல்லவை;-
வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால
தீண்டாவிடுதல் அரிது.
உரை
   
110. சிறுகா, பெருகா, முறை பிறழ்ந்து வாரா,
உறு காலத்து ஊற்று ஆகா, ஆம் இடத்தே ஆகும்,
சிறுகாலைப் பட்ட பொறியும்; அதனால்,
இறுகாலத்து, என்னை பரிவு?
உரை