தொடக்கம் | ||
பழவினை
|
||
101. | பல் ஆவுள் உய்த்துவிடினும், குழக் கன்று வல்லது ஆம், தாய் நாடிக் கோடலை; தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தே, தற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு. |
உரை |
102. | உருவும், இளமையும், ஒண் பொருளும், உட்கும், ஒரு வழி நில்லாமை கண்டும், ஒரு வழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பு இட்டு நின்று வீழ்ம் தக்கது உடைத்து. |
உரை |
103. | வளம் பட வேண்டாதார் யார்? யாரும் இல்லை; அளந்தன போகம், அவர் அவர் ஆற்றான்;- விளங்காய் திரட்டினார் இல்லை; களங் கனியைக் கார் எனச் செய்தாரும் இல். |
உரை |
104. | உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா; பெறற்பால் அனையவும் அன்ன ஆம்;-மாரி வறப்பின், தருவாரும் இல்லை; அதனைச் சிறப்பின், தணிப்பாரும் இல். |
உரை |
105. | தினைத் துணையர் ஆகி, தம் தேசு உள் அடக்கி, பனைத் துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர்; நினைப்பக் கிடந்தது எவன் உண்டாம், மேலை வினைப்பயன் அல்லால், பிற? |
உரை |
106. | பல் ஆன்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும், கல்லாதார் வாழ்வது அறிதிரேல்,-கல்லாதார் சேதனம் என்னும் அச் சேறு அகத்து இன்மையால் கோது என்று கொள்ளாதாம், கூற்று. |
உரை |
107. | இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண, நெடுங் கடை நின்று உழல்வது எல்லாம்,-அடும்பம்பூ அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப!- முன்னை வினை ஆய்விடும். |
உரை |
108. | அறியாரும் அல்லர்; அறிவது அறிந்தும், பழியோடு பட்டவை செய்தல்,-வளி ஓடி நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப!- செய்த வினையான் வரும். |
உரை |
109. | ஈண்டு நீர் வையத்துள், எல்லாரும், எள்துணையும் வேண்டார்மன், தீய; விழைபமன், நல்லவை;- வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால தீண்டாவிடுதல் அரிது. |
உரை |
110. | சிறுகா, பெருகா, முறை பிறழ்ந்து வாரா, உறு காலத்து ஊற்று ஆகா, ஆம் இடத்தே ஆகும், சிறுகாலைப் பட்ட பொறியும்; அதனால், இறுகாலத்து, என்னை பரிவு? |
உரை |