தொடக்கம் | ||
மெய்ம்மை
|
||
111. | இசையா ஒரு பொருள் இல் என்றல், யார்க்கும் வசை அன்று; வையத்து இயற்கை; நசை அழுங்க நின்று ஓடிப் பொய்த்தல்,-நிரைதொடீஇ!-செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து. |
உரை |
112. | தக்காரும் தக்கவர் அல்லாரும், தம் நீர்மை எக்காலும் குன்றல் இலர் ஆவர்;-அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம்; கைக்குமாம், தேவரே தின்னினும், வேம்பு. |
உரை |
113. | கால் ஆடு போழ்தில், கழி கிளைஞர், வானத்து- மேல் ஆடும் மீனின் பலர் ஆவர்; ஏலா இடர் ஒருவர் உற்றக்கால்,-ஈர்ங் குன்ற நாட!- 'தொடர்பு உடையேம்' என்பார் சிலர். |
உரை |
114. | வடு இலா வையத்து, மன்னிய மூன்றில், நடுவணது எய்த, இரு தலையும் எய்தும்; நடுவணது எய்தாதான் எய்தும், உலைப் பெய்து, அடுவது போலும் துயர். |
உரை |
115. | நல் ஆவின் கன்றுஆயின், நாகும் விலை பெறூஉம்; கல்லாரே ஆயினும், செல்வர் வாய்ச் சொல் செல்லும். புல் ஈரப் போழ்தின் உழவேபோல் மீது ஆடி, செல்லாவாம், நல்கூர்ந்தார் சொல். |
உரை |
116. | இடம் பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும், அடங்காதார் என்றும் அடங்கார்;-தடங் கண்ணாய்!- உப்பொடு நெய், பால், தயிர், காயம், பெய்து அடினும், கைப்பு அறா, பேய்ச் சுரையின் காய். |
உரை |
117. | தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க! என்னை, அவரொடு பட்டது?-புன்னை விறல் பூங் கமழ் கானல் வீங்கு நீர்ச் சேர்ப்ப!- உறற்பால யார்க்கும் உறும். |
உரை |
118. | ஆ வேறு உருவின ஆயினும், ஆ பயந்த பால் வேறு உருவின அல்லவாம்; பால்போல் ஒருதன்மைத்து ஆகும் அறம்; நெறி, ஆபோல், உருவு பலகொளல், ஈங்கு. |
உரை |
119. | யாஅர், உலகத்து ஓர் சொல் இல்லார்?-தேருங்கால்- யாஅர், உபாயத்தின் வாழாதார்? யாஅர், இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர், கடைபோகச் செல்வம் உய்த்தார்? |
உரை |
120. | தாம் செய் வினை அல்லால், தம்மொடு செல்வது மற்று யாங்கணும் தேரின், பிறிது இல்லை; ஆங்குத் தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயன் இன்றே, கூற்றம் கொண்டு ஓடும் பொழுது. |
உரை |