தீவினை அச்சம்
 
121. துக்கத்துள் தூங்கி, துறவின்கண் சேர்கலா
மக்கட் பிணத்த, சுடுகாடு;-தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே, புலம் கெட்ட
புல்லறிவாளர் வயிறு.
உரை
   
122. இரும்பு ஆர்க்கும் காலர் ஆய், ஏதிலார்க்கு ஆள் ஆய்,
கரும்பு ஆர் கழனியுள் சேர்வர்;-சுரும்பு ஆர்க்கும்
காட்டுள் ஆய் வாழும் சிவலும் குறும்பூழும்
கூட்டுள் ஆய்க் கொண்டு வைப்பார்.
உரை
   
123. அக்கேபோல் அங்கை ஒழிய, விரல் அழுகி,
துக்கத் தொழுநோய் எழுபவே-அக் கால்,
அலவனைக் காதலித்துக் கால் முரித்துத் தின்ற
பழவினை வந்து அடைந்தக்கால்.
உரை
   
124. நெருப்பு அழல் சேர்ந்தக்கால், நெய் போல்வதூஉம்
எரிப்பச் சுட்டு, எவ்வ நோய் ஆக்கும்;-பரப்பக்
கொடு வினையர் ஆகுவர், கோடாரும், கோடிக்
கடு வினையர் ஆகியார்ச் சார்ந்து.
உரை
   
125. பெரியவர் கேண்மை, பிறை போல, நாளும்
வரிசை வரிசையா நந்தும்; வரிசையால்,
வான் ஊர் மதியம்போல் வைகலும் தேயுமே,
தானே, சிறியார் தொடர்பு.
உரை
   
126. சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன்; சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல் ஆயின்; சார்ந்தோய்! கேள்:
சாந்து அகத்து உண்டு என்று, செப்புத் திறந்து, ஒருவன்
பாம்பு கண்டன்னது உடைத்து.
உரை
   
127. யாஅர், ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் துணைமை உடையவர்?-சாரல்
கன மணி நின்று இமைக்கும் நாட! கேள்:-மக்கள்
மனம் வேறு; செய்கையும் வேறு.
உரை
   
128. உள்ளத்தால் நள்ளாது, உறுதித் தொழிலர் ஆய்,
கள்ளத்தால் நட்டார் கழி கேண்மை-தெள்ளிப்
புனற் செதும்பு நின்று அலைக்கும் பூங் குன்ற நாட!-
மனத்துக்கண் மாசு ஆய்விடும்.
உரை
   
129. ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கைப் பட்டக்கால்,
ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும்;-ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால், நல்ல
கருமமே, கல்லார்கண் தீர்வு.
உரை
   
130. மனைப் பாசம் கைவிடாய்! மக்கட்கு என்று ஏங்கி,
எனைத்து ஊழி வாழ்தியோ?-நெஞ்சே!-எனைத்தும்
சிறு வரையே ஆயினும், செய்த நன்று அல்லால்,
உறு பயனோ இல்லை, உயிர்க்கு.
உரை