| தொடக்கம் | ||
| கல்வி
|
||
| 131. | குஞ்சி அழகும், கொடுந் தானைக் கோட்டழகும், மஞ்சள் அழகும், அழகு அல்ல; நெஞ்சத்து, 'நல்லம் யாம்' என்னும் நடுவு நிலைமையால், கல்வி அழகே அழகு. |
உரை |
| 132. | இம்மை பயக்குமால்; ஈயக் குறைவு இன்றால்; தம்மை விளக்குமால்; தாம் உளராக் கேடு இன்றால்;- எம்மை உலகத்தும் யாம் காணேம், கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. |
உரை |
| 133. | களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர் விளை நிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;- கடை நிலத்தோர் ஆயினும், கற்று அறிந்தோரைத் தலை நிலத்து வைக்கப்படும். |
உரை |
| 134. | வைப்புழிக் கோட்படா; வாய்த்து ஈயின், கேடு இல்லை; மிக்க சிறப்பின் அரசர் செறின், வவ்வார்; எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன விச்சை; மற்று அல்ல, பிற. |
உரை |
| 135. | கல்வி கரை இல; கற்பவர் நாள் சில; மெல்ல நினைக்கின், பிணி பல; தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப் பால் உண் குருகின் தெரிந்து. |
உரை |
| 136. | தோணி இயக்குவான், தொல்லை வருணத்து, காணின், கடைப்பட்டான் என்று இகழார்; காணாய்! அவன் துணையா ஆறு போயற்றே, நூல் கற்ற மகன் துணையா நல்ல கொளல். |
உரை |
| 137. | தவல் அருந் தொல் கேள்வித் தன்மை உடையார், இகல் இலர், எஃகு உடையார், தம்முள் குழீஇ, நகலின் இனிதுஆயின், காண்பாம், அகல் வானத்து உம்பர் உறைவார் பதி. |
உரை |
| 138. | கனை கடல் தண் சேர்ப்ப! கற்று அறிந்தார் கேண்மை நுனியின் கரும்பு தின்றற்றே; நுனி நீக்கித் தூரின் தின்றன்ன தகைத்துஅரோ, பண்பு இலா ஈரம் இலாளர் தொடர்பு. |
உரை |
| 139. | கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின், நல்லறிவு நாளும் தலைப்படுவர்-தொல் சிறப்பின் ஒள் நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு. |
உரை |
| 140. | அலகு சால் கற்பின், அறிவன் நூல் கல்லாது, உலக நூல் ஓதுவது எல்லாம், கலகல கூஉம் துணைஅல்லால், கொண்டு, தடுமாற்றம் போஒம் துணை அறிவார் இல். |
உரை |