குடிப்பிறப்பு
 
141. உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும்,
குடிப் பிறப்பாளர் தம் கொள்கையின் குன்றார்;-
இடுக்கண் தலைவந்தக்கண்ணும், அரிமா
கொடிப் புல் கறிக்குமோ மற்று?
உரை
   
142. சான்றாண்மை, சாயல், ஒழுக்கம், இவை மூன்றும்
வான் தோய் குடிப் பிறந்தார்க்கு அல்லது,-வான் தோயும்
மை தவழ் வெற்ப!-படாஅ, பெருஞ் செல்வம்
எய்தியக்கண்ணும், பிறர்க்கு.
உரை
   
143. இருக்கை எழலும், எதிர் செலவும், ஏனை
விடுப்ப ஒழிதலோடு, இன்ன, குடிப் பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார்; கயவரோடு
ஒன்றா உணரற்பாற்று அன்று.
உரை
   
144. நல்லவை செய்யின் இயல்பு ஆகும்; தீயவை
பல்லவர் தூற்றும் பழி ஆகும்; எல்லாம்
உணரும் குடிப் பிறப்பின் ஊதியம் என்னோ
புணரும் ஒருவர்க்கு எனின்?
உரை
   
145. கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம்;
சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம்; எல்லாம்
இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம்; மரத்தார்; இம்
மாணாக் குடிப் பிறந்தார்.
உரை
   
146. இன நன்மை, இன்சொல், ஒன்று ஈதல், மற்று ஏனை
மன நன்மை, என்று இவை எல்லாம்,-கன மணி
முத்தோடு இமைக்கும் முழங்கு உவரித் தண் சேர்ப்ப!-
இற் பிறந்தார்கண்ணே உள.
உரை
   
147. செய்கை அழிந்து, சிதல் மண்டிற்றுஆயினும்,
பெய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்து ஆகும்;-
எவ்வம் உழந்தக்கடைத்தும், குடிப் பிறந்தார்
செய்வர், செயற்பாலவை.
உரை
   
148. ஒரு புடை பாம்பு கொளினும், ஒரு புடை
அம் கண் மா ஞாலம் விளக்குறூஉம் திங்கள்போல்,-
செல்லாமை செல்வன் நேர் நிற்பினும், ஒப்புரவிற்கு
ஒல்கார்-குடிப் பிறந்தார்.
உரை
   
149. செல்லா இடத்தும் குடிப் பிறந்தார் செய்வன,
செல் இடத்தும் செய்யார், சிறியவர்;-புல்வாய்
பருமம் பொறுப்பினும், பாய் பரிமாபோல்
பொரு முரண் ஆற்றுதல் இன்று.
உரை
   
150. எற்று ஒன்றும் இல்லா இடத்தும், குடிப் பிறந்தார்
அற்றுத் தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர்;-
அற்றக் கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக்கால்,
தெற்றெனத் தெள் நீர் படும்.
உரை