தொடக்கம் | ||
மேன்மக்கள்
|
||
151. | அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்; திங்கள் மறு ஆற்றும்; சான்றோர் அஃது ஆற்றார்; தெருமந்து தேய்வர், ஒரு மாசு உறின். |
உரை |
152. | இசையும் எனினும், இசையாதுஎனினும், வசை தீர எண்ணுவர், சான்றோர்;-விசையின் நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ, அரிமாப் பிழைப்ப எய்த கோல்? |
உரை |
153. | நரம்பு எழுந்து நல்கூர்ந்தார் ஆயினும், சான்றோர் குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார்; உரம் கவறா, உள்ளம் எனும் நாரினால் கட்டி, உளவரையால் செய்வர், செயற்பாலவை. |
உரை |
154. | செல்வுழிக்கண் ஒருநாள் காணினும், சான்றவர் தொல் வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்து யாப்பர்;- நல் வரை நாட!-சில நாள் அடிப்படின், கல் வரையும் உண்டாம், நெறி. |
உரை |
155. | புல்லா எழுத்தின் பொருள் இல் வறுங் கோட்டி, கல்லா ஒருவன் உரைப்பவும், கண் ஓடி, நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்று அவன் பல்லாருள் நாணல் பரிந்து. |
உரை |
156. | கடித்துக் கரும்பினைக் கண் தகர நூறி, இடித்து, நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்;- வடுப்பட வைது இறந்தக்கண்ணும், குடிப் பிறந்தார் கூறார், தம் வாயின் சிதைந்து. |
உரை |
157. | கள்ளார்; கள் உண்ணார்; கடிவ கடிந்து ஒரீஇ, எள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார்; தள்ளியும், வாயின் பொய் கூறார்;-வடு அறு காட்சியார்- சாயின், பரிவது இலர். |
உரை |
158. | பிறர் மறையின்கண் செவிடு ஆய், திறன் அறிந்து ஏதிலார் இற்கண் குருடன் ஆய், தீய புறங்கூற்றின் மூங்கை ஆய், நிற்பானேல், யாதும் அறம் கூற வேண்டா, அவற்கு. |
உரை |
159. | பல் நாளும் சென்றக்கால், பண்பு இலார் தம்முழை, 'என்னானும் வேண்டுப' என்று இகழ்ப; 'என்னானும் வேண்டினும் நன்று மற்று' என்று, விழுமியோர் காண்தொறும் செய்வர், சிறப்பு. |
உரை |
160. | 'உடையார் இவர்' என்று, ஒருதலையாப் பற்றி, கடையாயார் பின் சென்று வாழ்வர்; உடைய பிலம் தலைப்பட்டது போலாதே, நல்ல குலம் தலைப்பட்ட இடத்து? |
உரை |