மேன்மக்கள்
 
151. அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்; திங்கள்
மறு ஆற்றும்; சான்றோர் அஃது ஆற்றார்; தெருமந்து
தேய்வர், ஒரு மாசு உறின்.
உரை
   
152. இசையும் எனினும், இசையாதுஎனினும்,
வசை தீர எண்ணுவர், சான்றோர்;-விசையின்
நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ,
அரிமாப் பிழைப்ப எய்த கோல்?
உரை
   
153. நரம்பு எழுந்து நல்கூர்ந்தார் ஆயினும், சான்றோர்
குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார்; உரம் கவறா,
உள்ளம் எனும் நாரினால் கட்டி, உளவரையால்
செய்வர், செயற்பாலவை.
உரை
   
154. செல்வுழிக்கண் ஒருநாள் காணினும், சான்றவர்
தொல் வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்து யாப்பர்;-
நல் வரை நாட!-சில நாள் அடிப்படின்,
கல் வரையும் உண்டாம், நெறி.
உரை
   
155. புல்லா எழுத்தின் பொருள் இல் வறுங் கோட்டி,
கல்லா ஒருவன் உரைப்பவும், கண் ஓடி,
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்று அவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
உரை
   
156. கடித்துக் கரும்பினைக் கண் தகர நூறி,
இடித்து, நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்;-
வடுப்பட வைது இறந்தக்கண்ணும், குடிப் பிறந்தார்
கூறார், தம் வாயின் சிதைந்து.
உரை
   
157. கள்ளார்; கள் உண்ணார்; கடிவ கடிந்து ஒரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார்; தள்ளியும்,
வாயின் பொய் கூறார்;-வடு அறு காட்சியார்-
சாயின், பரிவது இலர்.
உரை
   
158. பிறர் மறையின்கண் செவிடு ஆய், திறன் அறிந்து
ஏதிலார் இற்கண் குருடன் ஆய், தீய
புறங்கூற்றின் மூங்கை ஆய், நிற்பானேல், யாதும்
அறம் கூற வேண்டா, அவற்கு.
உரை
   
159. பல் நாளும் சென்றக்கால், பண்பு இலார் தம்முழை,
'என்னானும் வேண்டுப' என்று இகழ்ப; 'என்னானும்
வேண்டினும் நன்று மற்று' என்று, விழுமியோர்
காண்தொறும் செய்வர், சிறப்பு.
உரை
   
160. 'உடையார் இவர்' என்று, ஒருதலையாப் பற்றி,
கடையாயார் பின் சென்று வாழ்வர்; உடைய
பிலம் தலைப்பட்டது போலாதே, நல்ல
குலம் தலைப்பட்ட இடத்து?
உரை