தொடக்கம் | ||
பெரியாரைப் பிழையாமை
|
||
161. | 'பொறுப்பர்' என்று எண்ணி, புரை தீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும்; வெறுத்தபின்,- ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட!- பேர்க்குதல் யார்க்கும் அரிது. |
உரை |
162. | பொன்னே கொடுத்தும், புணர்தற்கு அரியாரைக் கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும், அன்னோ! பயன் இல் பொழுதாக் கழிப்பரே-நல்ல நயம் இல் அறிவினவர். |
உரை |
163. | அவமதிப்பும், ஆன்ற மதிப்பும், இரண்டும், மிகை மக்களால் மதிக்கற்பால; நயம் உணரா, கை அறியா, மாக்கள் இழிப்பும் எடுத்து ஏத்தும், வையார், வடித்த நூலார். |
உரை |
164. | விரி நிற நாகம் விடர் உளதேனும், உருமின் கடுஞ் சினம் சேண் நின்றும், உட்கும்;- அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார், பெருமை உடையார் செறின். |
உரை |
165. | 'எம்மை அறிந்திலிர்; எம் போல்வார் இல்' என்று தம்மைத் தாம் கொள்வது கோள் அன்று; தம்மை அரியரா நோக்கி, அறன் அறியும் சான்றோர், பெரியராக் கொள்வது கோள். |
உரை |
166. | நளி கடல் தண் சேர்ப்ப! நாள் நிழல் போல விளியும், சிறியவர் கேண்மை; விளிவு இன்றி, அல்கு நிழல்போல், அகன்று அகன்று ஓடுமே, தொல் புகழாளர் தொடர்பு. |
உரை |
167. | மன்னர் திருவும், மகளிர் எழில் நலமும், துன்னியார் துய்ப்பர்; தகல் வேண்டா;-துன்னிக் குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம் உழை, தம்கண் சென்றார்க்கு ஒருங்கு. |
உரை |
168. | தெரியத் தெரியும் தெரிவு இலார்க்கண்ணும் பெரிய, பெரும் படர் நோய் செய்யும்;-பெரிய உலவா இருங் கழிச் சேர்ப்ப!-யார் மாட்டும் கலவாமை கோடி உறும். |
உரை |
169. | கல்லாது போகிய நாளும், பெரியவர்கண் செல்லாது வைகிய வைகலும், ஒல்வ கொடாஅது ஒழிந்த பகலும்,-உரைப்பின், படாஅ ஆம், பண்புடையார்கண். |
உரை |
170. | பெரியார் பெருமை சிறு தகைமை; ஒன்றிற்கு உரியார் உரிமை அடக்கம்; தெரியுங்கால், செல்வம் உடையாரும் செல்வரே, தற்சேர்ந்தார் அல்லல் களைபஎனின். |
உரை |