தொடக்கம் | ||
பெருமை
|
||
181. | 'ஈதல் இசையாது; இளமை சேண் நீங்குதலால், காதலவரும் கருத்து அல்லர்; காதலித்து, “ஆதும் நாம்” என்னும் அவாவினைக் கைவிட்டுப் போவதே போலும் பொருள்!' |
உரை |
182. | 'இச் சார்வின் ஏமாந்தேம்; ஈங்கு அமைந்தேம்' என்று எண்ணிப் பொச்சாந்து ஒழுகுவர், பேதையார்; 'அச் சார்வு நின்றன போன்று நிலையா' என உணர்ந்தார், என்றும் பரிவது இலர். |
உரை |
183. | மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து, சிறுமைப் படாதே, நீர் வாழ்மின், அறிஞராய்;- நின்றுழி நின்றே நிறம் வேறு ஆம்; காரணம் இன்றிப் பலவும் உள. |
உரை |
184. | 'உறைப்பு அருங் காலத்தும், ஊற்று நீர்க் கேணி இறைத்து உணினும், ஊர் ஆற்றும்' என்பர்; கொடைக்கடனும், சாஅயக்கண்ணும், பெரியார்போல் மற்றையார் ஆஅயக்கண்ணும், அரிது. |
உரை |
185. | உறு புனல் தந்து, உலகு ஊட்டி, அறும் இடத்தும் கல்லுற்றுழி ஊறும் ஆறேபோல், செல்வம் பலர்க்கு ஆற்றி, கெட்டு உலந்தக்கண்ணும், சிலர்க்கு ஆற்றிச் செய்வர், செயற்பாலவை. |
உரை |
186. | பெரு வரை நாட! பெரியார்கண் தீமை கரு நரைமேல் சூடேபோல் தோன்றும்; கரு நரையைக் கொன்றன்ன இன்னா செயினும், சிறியார்மேல் ஒன்றானும் தோன்றாக் கெடும். |
உரை |
187. | இசைந்த சிறுமை இயல்பு இலாதார்கண் பசைந்த துணையும், பரிவு ஆம்; அசைந்த நகையேயும் வேண்டாத நல் அறிவினார்கண் பகையேயும் பாடு பெறும். |
உரை |
188. | மெல்லிய நல்லாருள் மென்மை, அது இறந்து ஒன்னாருள் கூற்று உட்கும் உட்கு உடைமை, எல்லாம் சலவருள் சாலச் சலமே, நலவருள் நன்மை,-வரம்பாய் விடல்! |
உரை |
189. | கடுக்கி, ஒருவன் கடுங் குறளை பேசி, மயக்கிவிடினும், மனப் பிரிப்பு ஒன்று இன்றி, துளக்கம் இலாதவர், தூய மனத்தார், விளக்கினுள் ஒண் சுடரே போன்று. |
உரை |
190. | முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து, பின் துற்றுத் துற்றுவர், சான்றவர்; அத் துற்று முக் குற்றம் நீக்கி, முடியும் அளவு எல்லாம் துக்கத்துள் நீக்கிவிடும். |
உரை |