தொடக்கம் | ||
தாளாண்மை
|
||
191. | கோள் ஆற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங் கூழ்போல், கேள் ஈவது உண்டு, கிளைகேளா துஞ்சுப; வாள் ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க்கு உண்டோ, தவறு? |
உரை |
192. | ஆடு கோடு ஆகி அதரிடை நின்றதூஉம், காழ் கொண்டகண்ணே, களிறு அணைக்கும் கந்து ஆகும்;- வாழ்தலும் அன்ன தகைத்தே, ஒருவன்தான் தாழ்வு இன்றித் தன்னைச் செயின். |
உரை |
193. | உறு புலி ஊன் இரை இன்றி, ஒருநாள் சிறு தேரை பற்றியும் தின்னும்;-அறிவினால் கால்-தொழில் என்று கருதற்க! கையினால் மேல் தொழிலும் ஆங்கே மிகும். |
உரை |
194. | இசையாது எனினும், இயற்றி, ஓர் ஆற்றால் அசையாது, நிற்பதாம் ஆண்மை; இசையுங்கால்,- கண்டல் திரை அலைக்கும் கானல் அம் தண் சேர்ப்ப!- பெண்டிரும் வாழாரோ மற்று? |
உரை |
195. | நல்ல குலம் என்றும், தீய குலம் என்றும், சொல் அளவு அல்லால் பொருள் இல்லை; தொல் சிறப்பின் ஒண் பொருள் ஒன்றோ? தவம், கல்வி, ஆள்வினை, என்று இவற்றான் ஆகும், குலம். |
உரை |
196. | ஆற்றும் துணையும், அறிவினை உள் அடக்கி, ஊற்றம் உரையார் உணர்வு உடையார்; ஊற்றம் உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார் குறிப்பின்கீழ்ப் பட்டது, உலகு. |
உரை |
197. | சிதலை தினப்பட்ட ஆல மரத்தை, மதலை ஆய், மற்று அதன் வீழ் ஊன்றியாங்கு, குதலைமை தந்தைகண் தோன்றின், தான் பெற்ற புதல்வன் மறைப்ப, கெடும். |
உரை |
198. | ஈனமாய், இல் இருந்து, இன்றி, விளியினும், மானம் தலைவருவ செய்பவோ-யானை வரி முகம் புண்படுக்கும் வள் உகிர் நோன் தாள் அரிமா மதுகையவர்? |
உரை |
199. | தீம் கரும்பு ஈன்ற திரள் கால் உளை அலரி தேம் கமழ் நாற்றம் இழந்தாஅங்கு, ஓங்கும் உயர் குடியுள் பிறப்பின் என்னாம்-பெயர் பொறிக்கும் பேர் ஆண்மை இல்லாக்கடை? |
உரை |
200. | பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும் கருனைச் சோறு ஆர்வர் கயவர்; கருனையைப் பேரும் அறியார், நனி விரும்பு தாளாண்மை நீரும் அமிழ்து ஆய்விடும். |
உரை |