தொடக்கம் | ||
சுற்றந் தழால்
|
||
201. | வயாவும், வருத்தமும், ஈன்றக்கால் நோவும், கவாஅன் மகற் கண்டு தாய் மறந்தாஅங்கு, அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத் தன் கேளிரைக் காண, கெடும். |
உரை |
202. | அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம் நிழல் மரம்போல் நேர் ஒப்பத் தாங்கி, பழு மரம்போல் பல்லார் பயன் துய்ப்ப, தான் வருந்தி வாழ்வதே- நல் ஆண்மகற்குக் கடன். |
உரை |
203. | அடுக்கல் மலை நாட! தற் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் பெரியோர்;-அடுத்து அடுத்து வன் காய் பலபல காய்ப்பினும், இல்லையே, தன் காய் பொறுக்கலாக் கொம்பு? |
உரை |
204. | உலகு அறியத் தீரக் கலப்பினும், நில்லா, சில பகல் ஆம், சிற்றினத்தார் கேண்மை; நிலை திரியா- நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்றனைத்தால், ஒற்கம் இலாளர் தொடர்பு. |
உரை |
205. | ‘இன்னர்; இனையர்; எமர்; பிறர்’ என்னும் சொல் என்னும் இலர் ஆம் இயல்பினால் துன்னி, தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே,-யார்மாட்டும் தலைமக்கள் ஆகற்பாலார். |
உரை |
206. | பொற் கலத்துப் பெய்த புலி உகிர் வான் புழுக்கல் அக்காரம் பாலோடு அமரார் கைத்து உண்டலின், உப்பு இலிப் புற்கை, உயிர்போல் கிளைஞர் மாட்டு எக் கலத்தானும் இனிது. |
உரை |
207. | நாள்வாய்ப் பெறினும், தம் நள்ளாதார் இல்லத்து, வேளாண்மை வெங் கருனை வேம்பு ஆகும்; கேளாய்; அபரானப் போழ்தின் அடகு இடுவரேனும், தமர் ஆயார்மாட்டே இனிது. |
உரை |
208. | முட்டிகை போல முனியாது, வைகலும், கொட்டி உண்பாரும், குறடுபோல் கைவிடுவர், சுட்டுக்கோல் போல, எரியும் புகுவரே, நட்டார் எனப்படுவார். |
உரை |
209. | நறு மலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார் மறுமையும் செய்வது ஒன்று உண்டோ-இறும் அளவும், இன்புறுவ இன்புற்று எழீஇ, அவரொடு துன்புறுவ துன்புறாக்கால்? |
உரை |
210. | விருப்பு இலார் இல்லத்து வேறு இருந்து உண்ணும் வெருக்குக் கண் வெங்கருனை வேம்பு ஆம்; விருப்புடைத் தன் போல்வார் இல்லுள் தயங்கு நீர்த் தண் புற்கை என்போடு இயைந்த அமிழ்து. |
உரை |