நட்பிற் பிழைபொறுத்தல்
 
221. நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,
அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;-
நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;
புல் இதழ் பூவிற்கும் உண்டு.
உரை
   
222. செறுத்தோறு உடைப்பினும், செம் புனலோடு ஊடார்,
மறுத்தும் சிறைசெய்வர், நீர் நசைஇ வாழ்நர்;-
வெறுப்ப வெறுப்பச் செயினும், பொறுப்பரே,
தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு.
உரை
   
223. இறப்பவே தீய செயினும், தன் நட்டார்
பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ?-நிறக் கோங்கு
உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட!-
ஒருவர் பொறை இருவர் நட்பு.
உரை
   
224. மடி திரை தந்திட்ட வான் கதிர் முத்தம்
கடு விசை நாவாய் கரை அலைக்கும் சேர்ப்ப!
விடுதற்கு அரியார் இயல்பு இலரேல், நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ.
உரை
   
225. இன்னா செயினும், விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும்-பொன்னொடு
நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடித் தம்
இல்லத்தில் ஆக்குதலால்.
உரை
   
226. இன்னா செயினும், விடுதற்கு அரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ? துன்னு அருஞ்சீர்
விண் குத்தும் நீள் வரை வெற்ப!- களைபவோ,
கண் குத்திற்று என்று தம் கை?
உரை
   
227. இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! இன்னா செயினும்,
கலந்து பழி காணார், சான்றோர்; கலந்தபின்,
தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார்-
தாமும், அவரின் கடை.
உரை
   
228. ஏதிலார் செய்தது இறப்பவே தீது எனினும்,
நோதக்கது என் உண்டாம், நோக்குங்கால்? காதல்
கழுமியார் செய்த,-கறங்கு அருவி நாட!-
விழுமிதாம், நெஞ்சத்துள் நின்று.
உரை
   
229. தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர் தம்மைத்
தமர் அன்மை தாம் அறிந்தார் ஆயின், அவரைத்
தமரினும் நன்கு மதித்து, தமர் அன்மை
தம்முள் அடக்கிக்கொளல்!
உரை
   
230. ‘குற்றமும், ஏனைக் குணமும், ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல், நட்டான்
மறை காவா விட்டவன் செல்வுழிச் செல்க,
அறை கடல் சூழ் வையம் நக!’
உரை