தொடக்கம் | ||
அறிவின்மை
|
||
251. | நுண் உணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்;-எண்ணுங்கால், பெண் அவாய், ஆண் இழந்த பேடி அணியாளோ, கண் அவாத் தக்க கலம்? |
உரை |
252. | பல் ஆன்ற கேள்விப் பயன் உணர்வார் பாடு அழிந்து, அல்லல் உழப்பது அறிதிரேல்,-தொல் சிறப்பின் நாவின் கிழத்தி உறைதலால், சேராளே, பூவின் கிழத்தி புலந்து. |
உரை |
253. | ‘கல்’ என்று தந்தை கழற, அதனை ஓர் சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன், மெல்ல எழுத்து ஓலை பல்லார்முன் நீட்ட, விளியா, வழுக் கோலைக் கொண்டுவிடும். |
உரை |
254. | கல்லாது நீண்ட ஒருவன், உலகத்து, நல்லறிவாளரிடைப் புக்கு, மெல்ல இருப்பினும், நாய் இருந்தற்றே; இராஅது உரைப்பினும், நாய் குரைத்தற்று. |
உரை |
255. | புல்லாப் புன் கோட்டிப் புலவரிடைப் புக்கு, கல்லாத சொல்லும், கடை எல்லாம்; கற்ற கடாஅயினும் சான்றவர் சொல்லார், பொருள்மேல் படாஅ விடுபாக்கு அறிந்து. |
உரை |
256. | கற்று அறிந்த நாவினார் சொல்லார், தம் சோர்வு அஞ்சி; மற்றையர் ஆவார் பகர்வர்;-பனையின்மேல் வற்றிய ஓலை கலகலக்கும்; எஞ் ஞான்றும் பச்சோலைக்கு இல்லை, ஒலி. |
உரை |
257. | பன்றிக் கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால், நன்று அறியா மாந்தர்க்கு அறத்து ஆறு உரைக்குங்கால்; குன்றின்மேல் கொட்டும் தறிபோல் தலை தகர்ந்து சென்று இசையா ஆகும், செவிக்கு. |
உரை |
258. | பாலால் கழீஇ, பல நாள் உணக்கினும், வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று;- கோலால் கடாஅய்க் குறினும், புகல் ஒல்லா, நோலா உடம்பிற்கு அறிவு. |
உரை |
259. | பொழிந்து இனிது நாறினும், பூ மிசைதல் செல்லாது, இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், இழிந்தவை- தாம் கலந்த நெஞ்சினார்க்கு என் ஆகும், தக்கார் வாய்த் தேன் கலந்த தேற்றச் சொல் தேர்வு? |
உரை |
260. | கற்றார் உரைக்கும் கசடு அறு நுண் கேள்வி பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால், மற்றும் ஓர் தன்போல் ஒருவன் முகம் நோக்கி, தானும் ஓர் புன்கோட்டி கொள்ளுமாம், கீழ். |
உரை |