அறிவின்மை
 
251. நுண் உணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை
பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்;-எண்ணுங்கால்,
பெண் அவாய், ஆண் இழந்த பேடி அணியாளோ,
கண் அவாத் தக்க கலம்?
உரை
   
252. பல் ஆன்ற கேள்விப் பயன் உணர்வார் பாடு அழிந்து,
அல்லல் உழப்பது அறிதிரேல்,-தொல் சிறப்பின்
நாவின் கிழத்தி உறைதலால், சேராளே,
பூவின் கிழத்தி புலந்து.
உரை
   
253. ‘கல்’ என்று தந்தை கழற, அதனை ஓர்
சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன், மெல்ல
எழுத்து ஓலை பல்லார்முன் நீட்ட, விளியா,
வழுக் கோலைக் கொண்டுவிடும்.
உரை
   
254. கல்லாது நீண்ட ஒருவன், உலகத்து,
நல்லறிவாளரிடைப் புக்கு, மெல்ல
இருப்பினும், நாய் இருந்தற்றே; இராஅது
உரைப்பினும், நாய் குரைத்தற்று.
உரை
   
255. புல்லாப் புன் கோட்டிப் புலவரிடைப் புக்கு,
கல்லாத சொல்லும், கடை எல்லாம்; கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார், பொருள்மேல்
படாஅ விடுபாக்கு அறிந்து.
உரை
   
256. கற்று அறிந்த நாவினார் சொல்லார், தம் சோர்வு அஞ்சி;
மற்றையர் ஆவார் பகர்வர்;-பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும்; எஞ் ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை, ஒலி.
உரை
   
257. பன்றிக் கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்,
நன்று அறியா மாந்தர்க்கு அறத்து ஆறு உரைக்குங்கால்;
குன்றின்மேல் கொட்டும் தறிபோல் தலை தகர்ந்து
சென்று இசையா ஆகும், செவிக்கு.
உரை
   
258. பாலால் கழீஇ, பல நாள் உணக்கினும்,
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று;-
கோலால் கடாஅய்க் குறினும், புகல் ஒல்லா,
நோலா உடம்பிற்கு அறிவு.
உரை
   
259. பொழிந்து இனிது நாறினும், பூ மிசைதல் செல்லாது,
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், இழிந்தவை-
தாம் கலந்த நெஞ்சினார்க்கு என் ஆகும், தக்கார் வாய்த்
தேன் கலந்த தேற்றச் சொல் தேர்வு?
உரை
   
260. கற்றார் உரைக்கும் கசடு அறு நுண் கேள்வி
பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால், மற்றும் ஓர்
தன்போல் ஒருவன் முகம் நோக்கி, தானும் ஓர்
புன்கோட்டி கொள்ளுமாம், கீழ்.
உரை