தொடக்கம் | ||
நன்னெறியில் செல்வம்
|
||
261. | அருகலது ஆகிப் பல பழுத்தக்கண்ணும், பொரி தாள் விளவினை வாவல் குறுகா;- பெரிது அணியர் ஆயினும், பீடு இலார் செல்வம் கருதும் கடப்பாட்டது அன்று. |
உரை |
262. | அள்ளிக்கொள்வன்ன குறு முகிழ ஆயினும், கள்ளிமேல் கைந் நீட்டார், சூடும் பூ அன்மையால்;- செல்வம் பெரிது உடையர் ஆயினும், கீழ்களை நள்ளார், அறிவுடையார். |
உரை |
263. | மல்கு திரைய கடற் கோட்டு இருப்பினும், வல் ஊற்று உவர் இல் கிணற்றின்கண் சென்று உண்பர்;- செல்வம் பெரிது உடையர் ஆயினும், சேண் சென்றும் நல்குவார்கட்டே நசை. |
உரை |
264. | புணர் கடல் சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே- உணர்வது உடையார் இருப்ப, உணர்வு இலா வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்பவே, பட்டும் துகிலும் உடுத்து! |
உரை |
265. | நல்லார் நயவர் இருப்ப, நயம் இலாக் கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம், தொல்லை வினைப் பயன் அல்லது,-வேல் நெடுங் கண்ணாய்!- நினைப்ப வருவது ஒன்று இல். |
உரை |
266. | நாறாத் தகடே போல் நல் மலர்மேல் பொற்பாவாய்!- நீறாய் நிலத்து விளிஅரோ-வேறு ஆய புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ, பொன் போலும் நன்மக்கள் பக்கம் துறந்து! |
உரை |
267. | நயவார்கண் நல்குரவு நாண் இன்று கொல்லோ? பயவார்கண் செல்வம் பரம்பப் பயின்கொல்? வியவாய்காண்,-வேற் கண்ணாய்!-இவ் இரண்டும் ஆங்கே நயவாது நிற்கும் நிலை. |
உரை |
268. | வலவைகள் அல்லாதார், கால் ஆறு சென்று, கலவைகள் உண்டு, கழிப்பர்; வலவைகள் கால் ஆறும் செல்லார், கருனையால் துய்ப்பவே, மேல் ஆறு பாய, விருந்து. |
உரை |
269. | பொன் நிறச் செந்நெல் பொதியொடு பீள் வாட, மின் ஒளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும்- வெண்மை உடையார் விழுச் செல்வம் எய்தியக்கால், வண்மையும் அன்ன தகைத்து. |
உரை |
270. | ஓதியும் ஓதார், உணர்வு இலார்; ஓதாதும் ஓதி அனையார், உணர்வு உடையார்; தூய்து ஆக நல்கூர்ந்தும் செல்வர், இரவாதார்; செல்வரும் நல்கூர்ந்தார், ஈயார் எனின். |
உரை |