தொடக்கம் | ||
ஈயாமை
|
||
271. | நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உள வரையால் அட்டது பாத்து உண்டல், அட்டு உண்டல்; அட்டது அடைத்து இருந்து உண்டு ஒழுகும் ஆவது இல் மாக்கட்கு அடைத்தவாம், ஆண்டைக் கதவு. |
உரை |
272. | எத்துணையானும், இயைந்த அளவினால், சிற்றறம் செய்தார் தலைப்படுவர்; மற்றைப் பெருஞ் செல்வம் எய்தியக்கால், ‘பின் அறிதும்!’ என்பார் அழிந்தார், பழி கடலத்துள். |
உரை |
273. | துய்த்துக் கழியான், துறவோர்க்கு ஒன்று ஈகலான், வைத்துக் கழியும் மடவோனை,-வைத்த பொருளும் அவனை நகுமே; உலகத்து அருளும் அவனை நகும். |
உரை |
274. | கொடுத்தலும், துய்த்தலும் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ் செல்வம், இல்லத்து உருவுடைக் கன்னியரைப் போல, பருவத்தால், ஏதிலான் துய்க்கப்படும். |
உரை |
275. | எறி நீர்ப் பெருங் கடல் எய்தி இருந்தும், அறு நீர்ச் சிறு கிணற்று ஊறல் பார்த்து உண்பர்; மறுமை அறியாதார் ஆக்கத்தின், சான்றோர் கழி நல்குரவே தலை. |
உரை |
276. | ‘எனது எனது’ என்று இருக்கும் ஏழை பொருளை, ‘எனது எனது’ என்று இருப்பன், யானும்; தனது ஆயின், தானும் அதனை வழங்கான்; பயன் துவ்வான்; யானும் அதனை அது. |
உரை |
277. | வழங்காத செல்வரின், நல்கூர்ந்தார் உய்ந்தார்; இழந்தார் எனப்படுதல் உய்ந்தார்; உழந்து அதனைக் காப்பு உய்ந்தார்; கல்லுதலும் உய்ந்தார்; தம் கைந் நோவ யாப்பு உய்ந்தார்; உய்ந்த பல. |
உரை |
278. | தனது ஆகத் தான் கொடான்; தாயத்தவரும் தமது ஆய போழ்தே கொடாஅர்; தனது ஆக முன்னே கொடுப்பின், அவர் கடியார்; தான் கடியான், பின்னை அவர் கொடுக்கும் போழ்து. |
உரை |
279. | இரவலர் கன்று ஆக, ஈவார் ஆ ஆக, விரகின் சுரப்பதாம், வண்மை; விரகு இன்றி வல்லவர் ஊன்ற வடி ஆபோல், வாய் வைத்துக் கொல்லச் சுரப்பதாம், கீழ். |
உரை |
280. | ஈட்டலும் துன்பம்; மற்று ஈட்டிய ஒண் பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந் துன்பம்; காத்த குறைபடின், துன்பம்; கெடின், துன்பம்; துன்பக்கு உறைபதி, மற்றைப் பொருள். |
உரை |