தொடக்கம் | ||
இன்மை
|
||
281. | அத்து இட்ட கூறை அரைச் சுற்றி வாழினும், பத்து எட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும்; ஒத்த குடிப் பிறந்தக்கண்ணும், ஒன்று இல்லாதார் செத்த பிணத்தின் கடை. |
உரை |
282. | நீரினும் நுண்ணிது நெய் என்பர்; நெய்யினும் யாரும் அறிவர் புகை நுட்பம்; தேரின், நிரப்பு இடும்பையாளன் புகுமே, புகையும் புகற்கு அரிய பூழை நுழைந்து. |
உரை |
283. | கல் ஓங்கு உயர் வரைமேல் காந்தள் மலராக்கால், செல்லாவாம், செம் பொறி வண்டுஇனம்;-கொல்லைக் கலாஅல் கிளி கடியும் கானக நாட!- இலாஅஅர்க்கு இல்லை, தமர். |
உரை |
284. | உண்டாய போழ்தின், உடைந்துழிக் காகம்போல், தொண்டு ஆயிரவர் தொகுபவே; வண்டாய்த் திரிதரும் காலத்து, ‘தீது இலிரோ?’ என்பார் ஒருவரும் இவ் உலகத்து இல். |
உரை |
285. | பிறந்த குலம் மாயும்; பேர் ஆண்மை மாயும்; சிறந்த தம் கல்வியும் மாயும்;-கறங்கு அருவி கல்மேல் கழூஉம் கண மலை நல் நாட!- இன்மை தழுவப்பட்டார்க்கு. |
உரை |
286. | உள் கூர் பசியால் உழை நசைஇச் சென்றார்கட்கு, உள்ளூர் இருந்தும், ஒன்று ஆற்றாதான், உள்ளூர் இருந்து, உயிர் கொன்னே கழியாது, தான் போய் விருந்தினன் ஆதலே நன்று. |
உரை |
287. | நீர்மையே அன்றி, நிரம்ப எழுந்த தம் கூர்மையும் எல்லாம் ஒருங்கு இழப்பர்,-கூர்மையின் முல்லை அலைக்கும் எயிற்றாய்!-நிரப்பு என்னும் அல்லல் அடையப்பட்டார். |
உரை |
288. | இட்டு ஆற்றுப்பட்டு, ஒன்று இரந்தவர்க்கு ஆற்றாது, முட்டு ஆற்றுப்பட்டு, முயன்று, உள்ளூர் வாழ்தலின், நெட்டாற்றுச் சென்று, நிரை மனையில் கைந் நீட்டும் கெட்ட ஆற்று வாழ்க்கையே நன்று. |
உரை |
289. | கடகம் செறிந்த தம் கைகளால் வாங்கி, அடகு பறித்துக்கொண்டு அட்டு, குடை கலனா, உப்பு இலி வெந்தை தின்று, உள் அற்று, வாழ்பவே- துப்புரவு சென்று உலந்தக்கால். |
உரை |
290. | ஆர்த்த பொறிய அணி கிளர் வண்டுஇனம் பூத்து ஒழி கொம்பின்மேல் செல்லாவாம்;-நீர்த்து அருவி தாழா உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட!- வாழாதார்க்கு இல்லை, தமர். |
உரை |