தொடக்கம் | ||
மானம்
|
||
291. | திரு மதுகையாகத் திறன் இலார் செய்யும் பெருமிதம் கண்டக்கடைத்தும், எரி மண்டிக் கானம் தலைப்பட்ட தீப்போல் கனலுமே- மானம் உடையார் மனம். |
உரை |
292. | என்பாய் உகினும், இயல்பு இலார் பின் சென்று, தம் பாடு உரைப்பரோ, தம் உடையார்? தம் பாடு உரையாமை முன் உணரும் ஒண்மை உடையார்க்கு உரையாரோ, தாம் உற்ற நோய்? |
உரை |
293. | யாம் ஆயின் எம் இல்லம் காட்டுதும்; தாம் ஆயின், காணவே கற்பு அழியும் என்பார்போல், நாணி, புறங்கடை வைத்து ஈவர், சோறும்; அதனால் மறந்திடுக, செல்வர் தொடர்பு! |
உரை |
294. | இம்மையும் நன்று ஆம்; இயல் நெறியும் கைவிடாது, உம்மையும் நல்ல பயத்தலால்,-செம்மையின் நானம் கமழும் கதுப்பினாய்!-நன்றேகாண், மானம் உடையார் மதிப்பு. |
உரை |
295. | பாவமும் ஏனைப் பழியும் பட வருவ, சாயினும், சான்றவர் செய்கலார்;-சாதல் ஒருநாள் ஒரு பொழுதைத் துன்பம்; அவைபோல் அரு நவை ஆற்றுதல் இன்று. |
உரை |
296. | மல்லல் மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம் செல்வர் எனினும், கொடாதவர் நல்கூர்ந்தார்; நல்கூர்ந்தக்கண்ணும், பெரு முத்தரையரே, செல்வரைச் சென்று இரவாதார். |
உரை |
297. | கடை எலாம் காய் பசி அஞ்சும்; மற்று ஏனை இடை எலாம் இன்னாமை அஞ்சும்;-புடை உலாம் விற் புருவ வேல் நெடுங் கண்ணாய்!-தலை எலாம் சொற் பழி அஞ்சிவிடும். |
உரை |
298. | ‘நல்லர்! பெரிது அளியர்! நல்கூர்ந்தார்!’ என்று எள்ளி, செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால், கொல்லன் உலை ஊதும் தீயேபோல் உள் கனலும் கொல்லோ, தலையாய சான்றோர் மனம். |
உரை |
299. | நச்சியார்க்கு ஈயாமை நாண் அன்று; நாள் நாளும், அச்சத்தால் நாணுதல் நாண் அன்றாம்; எச்சத்தின் மெல்லியர் ஆகித் தம் மேலாயார் செய்தது சொல்லாது இருப்பது-நாண். |
உரை |
300. | கடமா தொலைச்சிய கான் உறை வேங்கை இடம் வீழ்ந்தது உண்ணாது இறக்கும்;-இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார், விழுமியோர், மானம் அழுங்க வரின். |
உரை |