தொடக்கம் | ||
இரவச்சம்
|
||
301. | ‘நம்மாலே ஆவர், இந் நல்கூர்ந்தார்; எஞ் ஞான்றும் தம்மால் ஆம் ஆக்கம் இலர்’ என்று, தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும் தெருண்ட அறிவினவர்? |
உரை |
302. | இழித்தக்க செய்து ஒருவன் ஆர உணலின், பழித்தக்க செய்யான், பசித்தல் தவறோ?- விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ, ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு? |
உரை |
303. | இல்லாமை கந்தா இரவு துணிந்து, ஒருவர் செல்லாரும் அல்லர், சிறு நெறி; புல்லா, ‘அகம் புகுமின்; உண்ணுமின்’ என்பவர்மாட்டு அல்லால், முகம்புகுதல் ஆற்றுமோ, மேல்? |
உரை |
304. | திருத் தன்னை நீப்பினும், தெய்வம் செறினும், உருத்த மனத்தோடு உயர்வு உள்ளின் அல்லால், அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின் சென்று, எருத்து இறைஞ்சி நில்லாதாம், மேல். |
உரை |
305. | கரவாத திண் அன்பின் கண் அன்னார்கண்ணும் இரவாது வாழ்வது ஆம் வாழ்க்கை; இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமால்; என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு? |
உரை |
306. | ‘இன்னா இயைக, இனிய ஒழிக’ என்று தன்னையே தான் இரப்பத் தீர்வதற்கு, என்னைகொல், காதல் கவற்றும் மனத்தினால் கண் பாழ்பட்டு ஏதிலவரை இரவு? |
உரை |
307. | என்றும் புதியார் பிறப்பினும், இவ் உலகத்து, என்றும் அவனே பிறக்கலான்-குன்றின் பரப்பு எலாம் பொன் ஒழுகும் பாய் அருவி நாட!- இரப்பாரை எள்ளா மகன். |
உரை |
308. | புறத்துத் தன் இன்மை நலிய, அகத்துத் தன் நல் ஞானம் நீக்கி நிறீஇ, ஒருவனை, ‘ஈயாய்’ எனக்கு!’ என்று இரப்பானேல், அந் நிலையே மாயானோ, மாற்றிவிடின்? |
உரை |
309. | ஒருவர் ஒருவரைச் சார்ந்து ஒழுகல் ஆற்றி, வழிபடுதல் வல்லுதல் அல்லால், பரிசு அழிந்து, ‘செய்யீரோ, என்னானும்!’ என்னும் சொற்கு இன்னாதே, பையத் தாம் செல்லும் நெறி? |
உரை |
310. | பழமை கந்தாகப் பசைந்த வழியே கிழமைதான் யாதானும் செய்க! கிழமை பொறாஅர் அவர் என்னின், பொத்தி, தம் நெஞ்சத்து அறாஅச் சுடுவது ஓர் தீ. |
உரை |