தொடக்கம் | ||
அவையறித்தல்
|
||
311. | மெய்ஞ் ஞானக் கோட்டி உறழ்வழி விட்டு, ஆங்கு ஓர் அஞ்ஞானம் தந்திட்டு, அது ஆங்கு அறத் துழாய், கைஞ் ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன், சொல் ஞானம் சோர விடல்! |
உரை |
312. | நாப் பாடம் சொல்லி நயம் உணர்வார்போல் செறிக்கும் தீப் புலவற் சேரார், செறிவுடையார்; தீப் புலவன் கோட்டியுள், குன்றக் குடி பழிக்கும்; அல்லாக்கால், தோள் புடைக்கொள்ளா எழும். |
உரை |
313. | சொல்-தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் காமுறுவர், கற்ற ஆற்றல் வன்மையும் தாம் தேறார், கற்ற செல உரைக்கும் ஆறு அறியார், தோற்பது அறியார், பல உரைக்கும் மாந்தர் பலர். |
உரை |
314. | கற்றதூஉம் இன்றி, கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம்; மற்று அதனை நல்லாரிடைப் புக்கு, நாணாது சொல்லி, தன் புல்லறிவு காட்டிவிடும். |
உரை |
315. | வென்றிப் பொருட்டால் விலங்கு ஒத்து, மெய் கொள்ளார், கன்றிக் கறுத்து எழுந்து, காய்வாரோடு ஒன்றி, உரை வித்தகம் எழுவார் காண்பவே, கையுள் சுரை வித்துப் போலும் தம் பல். |
உரை |
316. | பாடமே ஓதிப் பயன் தெரிதல் தேற்றாத மூடர் முனிதக்க சொல்லுங்கால், கேடு அருஞ்சீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்று அவரை ஈன்றாட்கு இறப்பப் பரிந்து. |
உரை |
317. | பெறுவது கொள்பவர் தோள்போல், நெறிபட்டுக் கற்பவர்க்கு எல்லாம் எளிய, நூல்; மற்று அம் முறி புரை மேனியர் உள்ளம் போன்று, யார்க்கும் அறிதற்கு அரிய, பொருள். |
உரை |
318. | புத்தகமே சாலத் தொகுத்தும், பொருள் தெரியார், உய்த்து, அகம் எல்லாம் நிறைப்பினும், மற்று அவற்றைப் போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறு. |
உரை |
319. | பொழிப்பு, அகலம், நுட்பம், நூல் எச்சம், இந் நான்கின் கொழித்து, அகலம் காட்டாதார் சொற்கள்,-பழிப்பு இல் நிரை ஆமா சேக்கும் நெடுங் குன்ற நாட!- உரை ஆமோ, நூலிற்கு நன்கு? |
உரை |
320. | இற் பிறப்பு இல்லார் எனைத்து நூல் கற்பினும், சொல் பிறரைக் காக்கும் கருவியரோ? இற் பிறந்த நல் அறிவாளர், நவின்ற நூல் தேற்றாதார் புல்லறிவு தாம் அறிவது இல். |
உரை |