தொடக்கம் | ||
புல்லறிவாண்மை
|
||
321. | அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச் சொல் பொருள் ஆகக் கொள்வர், புலவர்; பொருள் அல்லா ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும், பாற்கூழை மூழை சுவை உணராதாங்கு. |
உரை |
322. | அவ்வியம் இல்லார் அறத்து ஆறு உரைக்குங்கால், செவ்வியர் அல்லார் செவி கொடுத்தும் கேட்கலார்- கவ்வித் தோல் தின்னும் குணுங்கர் நாய் பாற்சோற்றின் செவ்வி கொளல் தேற்றாதாங்கு. |
உரை |
323. | இமைக்கும் அளவில் தம் இன் உயிர் போம் ஆற்றை எனைத்தானும் தாம் கண்டு இருந்தும், தினைத் துணையும் நன்றி புரிகல்லா, நாண் இல் மட மாக்கள் பொன்றில் என்? பொன்றாக்கால் என்? |
உரை |
324. | உளநாள் சிலவால்; உயிர்க்கு ஏமம் இன்றால்; பலர் மன்னும் தூற்றும் பழியால்; பலருள்ளும் கண்டாரோடு எல்லாம் நகாஅது, எவன் ஒருவன், தண்டி, தனிப்பகை கோள்? |
உரை |
325. | எய்தி இருந்த அவைமுன்னர்ச் சென்று, எள்ளி, வைதான், ஒருவன் ஒருவனை; வைய, வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான் வியத்தக்கான், வாழும் எனின். |
உரை |
326. | மூப்பு மேல் வாராமை முன்னே, அறவினையை ஊக்கி, அதன்கண் முயலாதான், நூக்கி, ‘புறத்து இரு; போகு’ என்னும் இன்னாச் சொல் இல்லுள் தொழுத்தையால் கூறப்படும். |
உரை |
327. | தாமேயும் இன்புறார்; தக்கார்க்கும் நன்று ஆற்றார்; ஏமம் சார் நல் நெறியும் சேர்கலார்; தாம் மயங்கி ஆக்கத்துள் தூங்கி, அவத்தமே வாழ்நாளைப் போக்குவார்-புல்லறிவினார். |
உரை |
328. | சிறுகாலையே தமக்குச் செல்வுழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார், இறுகிறுகி, ‘பின் அறிவாம்’ என்று இருக்கும் பேதையார், கை காட்டும் பொன்னும் புளி விளங்காய் ஆம். |
உரை |
329. | வெறுமை இடத்தும், விழுப் பிணிப் போழ்தும், மறுமை மனத்தாரே ஆகி, மறுமையை ஐந்தை அனைத்தானும், ஆற்றிய காலத்துச் சிந்தியார் சிற்றறிவினார். |
உரை |
330. | என்னே!-மற்று இவ் உடம்பு பெற்றும் அறம் நினையார், கொன்னே கழிப்பர் தம் வாழ்நாளை,-அன்னோ! அளவு இறந்த காதல் தம் ஆர் உயிர் அன்னார்க் கொள இழைக்கும் கூற்றமும் கண்டு. |
உரை |