தொடக்கம் | ||
பேதைமை
|
||
331. | கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்ப, ஆமை நிலை அறியாது அந் நீர் படிந்தாடியற்றே- கொலை வல் கொடுங் கூற்றம் கோள் பார்ப்ப, ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு. |
உரை |
332. | பெருங் கடல் ஆடிய சென்றார், ‘ஒருங்கு உடன் ஓசை அவிந்தபின் ஆடுதும்’ என்றற்றால்- ‘இல் செய் குறைவினை நீக்கி, அறவினை மற்று அறிவாம்’ என்று இருப்பார் மாண்பு. |
உரை |
333. | குலம், தவம், கல்வி, குடிமை, மூப்பு ஐந்தும் விலங்காமல் எய்தியக்கண்ணும், நலம் சான்ற மை அறு தொல் சீர் உலகம் அறியாமை நெய் இலாப் பாற்சோற்றின் நேர். |
உரை |
334. | கல் நனி நல்ல, கடை ஆய மாக்களின்- சொல் நனி தாம் உணரா ஆயினும், இன்னினியே நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல், என்று உற்றவர்க்குத் தாம் உதவலான். |
உரை |
335. | பெறுவது ஒன்று இன்றியும், பெற்றானே போலக் கறுவுகொண்டு, ஏலாதார்மாட்டும், கறுவினால் கோத்து இன்னா கூறி உரையாக்கால், பேதைக்கு நாத் தின்னும், நல்ல சுனைத்து! |
உரை |
336. | தம்கண் அமர்பு இல்லார்பின் சென்று, தாம், ‘அவரை எம்கண் வணக்குதும் ' என்பவர் புன் கேண்மை- நல் தளிர்ப் புன்னை மலரும் கடற் சேர்ப்ப!- கல் கிள்ளிக் கை இழந்தற்று. |
உரை |
337. | ஆகாதுஎனினும், அகத்து நெய் உண்டாகின், போகாது எறும்பு புறம் சுற்றும்;-யாதும் கொடாஅர் எனினும், உடையாரைப் பற்றி விடாஅர், உலகத்தவர். |
உரை |
338. | நல்லவை நாள்தொறும் எய்தார்; அறம் செய்யார்; இல்லாதார்க்கு யாது ஒன்றும் ஈகலார்; எல்லாம் இனியார் தோள் சேரார்; இசைபட வாழார்;- முனியார்கொல் தாம் வாழும் நாள்? |
உரை |
339. | விழைந்து ஒருவர் தம்மை வியப்ப, ஒருவர் விழைந்திலேம் என்று இருக்கும் கேண்மை, தழங்குரல் பாய் திரை சூழ் வையம் பயப்பினும், இன்னாதே- ஆய் நலம் இல்லாதார்மாட்டு. |
உரை |
340. | கற்றவும், கண் அகன்ற சாயலும், இற் பிறப்பும், பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்; தான் உரைப்பின், மைத்துனர் பல்கி, ‘மருந்தின் தணியாத பித்தன்!’ என்று எள்ளப்படும். |
உரை |