தொடக்கம் | ||
கீழ்மை
|
||
341. | கப்பி கடவதாக் காலைத் தன் வாய்ப் பெயினும், குப்பை கிளைப்பு ஓவாக் கோழிபோல், மிக்க கனம் பொதிந்த நூல் விரித்துக் காட்டினும், கீழ் தன் மனம் புரிந்தவாறே மிகும். |
உரை |
342. | ‘காழ் ஆய கொண்டு, கசடு அற்றார்தம் சாரல், தாழாது போவாம்’ என உரைப்பின், கீழ்தான், ‘உறங்குவாம்’ என்று எழுந்து போமாம்; அஃது அன்றி, மறங்குமாம், மற்று ஒன்று உரைத்து. |
உரை |
343. | பெரு நடை தாம் பெறினும், பெற்றி பிழையாது ஒரு நடையார் ஆகுவர், சான்றோர்; பெரு நடை பெற்றக்கடைத்தும்,-பிறங்கு அருவி நல் நாட!- வற்று ஆம் ஒரு நடை, கீழ். |
உரை |
344. | தினை அனைத்தே ஆயினும் செய்த நன்று உண்டால், பனை அனைத்தா உள்ளுவர், சான்றோர்; பனை அனைத்து என்றும் செயினும்,-இலங்கு அருவி நல் நாட!- நன்று இல, நன்று அறியார்மாட்டு. |
உரை |
345. | பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும், நாய் பிறர் எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; அச் சீர், பெருமை உடைத்தாக் கொளினும், கீழ் செய்யும் கருமங்கள் வேறுபடும். |
உரை |
346. | சக்கரச் செல்வம் பெறினும், விழுமியோர் எக் காலும் சொல்லார் மிகுதிச்சொல்; எக் காலும் முந்திரிமேற் காணி மிகுவதேல், கீழ் தன்னை இந்திரனா எண்ணிவிடும். |
உரை |
347. | மை தீர் பசும் பொன்மேல் மாண்ட மணி அழுத்திச் செய்தது எனினும், செருப்புத் தன் காற்கே ஆம்;- எய்திய செல்வத்தர் ஆயினும், கீழ்களைச் செய் தொழிலால் காணப்படும். |
உரை |
348. | கடுக்கெனச் சொல்வற்று ஆம்; கண்ணோட்டம் இன்றாம்; இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும்; அடுத்து அடுத்து வேகம் உடைத்து ஆம்;-விறல் மலை நல் நாட!- ஏகுமாம்; எள்ளுமாம்;-கீழ். |
உரை |
349. | ‘பழையர் இவர்’ என்று பல்நாள் பின் நிற்பின், உழை இனியர் ஆகுவர், சான்றோர்; விழையாதே,- கள் உயிர்க்கும் நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப!- எள்ளுவர், கீழாயவர். |
உரை |
350. | கொய் புல் கொடுத்துக் குறைத்து என்றும் தீற்றினும், வையம் பூண்கல்லா, சிறு குண்டை;-ஐய! கேள்;- எய்திய செல்வத்தர் ஆயினும், கீழ்களைச் செய்தொழிலால் காணப்படும். |
உரை |