தொடக்கம் | ||
கயமை
|
||
351. | ஆர்த்த அறிவினர், ஆண்டு இளையர் ஆயினும், காத்து ஓம்பித் தம்மை அடக்குப; மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந்து, எருவைபோல் போத்து அறார், புல்லறிவினார். |
உரை |
352. | செழும் பெரும் பொய்கையுள் வாழினும், என்றும் வழும்பு அறுக்ககில்லாவாம், தேரை; வழும்பு இல் சீர் நூல் கற்றக்கண்ணும், நுணுக்கம் ஒன்று இல்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது. |
உரை |
353. | கண மலை நல் நாட!-கண் இன்று ஒருவர் குணனேயும் கூறற்கு அரிதால்; குணன் அழுங்கக் குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோ, நா! |
உரை |
354. | கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை சேடியர் போலச் செயல் தேற்றார்; கூடி, புதுப்பெருக்கம் போலத் தம் பெண் நீர்மை காட்டி, மதித்து இறப்பர், மற்றையவர். |
உரை |
355. | தளிர்மேலே நிற்பினும், தட்டாமல் செல்லா உளி நீரர் மாதோ, கயவர்; அளி நீரார்க்கு என்னானும் செய்யார்; எனைத்தானும் செய்பவே, இன்னாங்கு செய்வார்ப் பெறின். |
உரை |
356. | மலை நலம் உள்ளும், குறவன்; பயந்த விளை நிலம் உள்ளும், உழவன்; சிறந்து ஒருவர் செய்த நன்று உள்ளுவர் சான்றோர்; கயம், தன்னை வைததை உள்ளிவிடும். |
உரை |
357. | ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்; கயவர்க்கு எழுநூறு நன்றி செய்து, ஒன்று தீதுஆயின், எழுநூறும் தீதாய்விடும். |
உரை |
358. | ஏட்டைப் பருவத்தும் இற் பிறந்தார் செய்வன, மோட்டிடத்தும் செய்யார், முழுமக்கள்;-கோட்டை வயிரம் செறிப்பினும்,-வாள் கண்ணாய்!-பன்றி செயிர் வேழம் ஆகுதல் இன்று. |
உரை |
359. | ‘இன்று ஆதும்; இந் நிலையே ஆதும்; இனிச் சிறிது நின்று ஆதும்’ என்று நினைத்திருந்து, ஒன்றி உரையின் மகிழ்ந்து, தம் உள்ளம் வேறு ஆகி, மரை இலையின் மாய்ந்தார், பலர். |
உரை |
360. | நீருள் பிறந்து, நிறம் பசியதுஆயினும், ஈரம் கிடையகத்து இல் ஆகும்;-ஓரும் நிறைப் பெருஞ் செல்வத்து நின்றக்கடைத்தும், அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து. |
உரை |