தொடக்கம் | ||
பன்னெறி
|
||
361. | மழை திளைக்கும் மாடம் ஆய், மாண்பு அமைந்த காப்பு ஆய், இழை விளக்கு நின்று இமைப்பின் என் ஆம், விழைதக்க மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்? காண்டற்கு அரியது ஓர் காடு! |
உரை |
362. | வழுக்கு எனைத்தும் இல்லாத வாள்வாய்க் கிடந்தும், இழுக்கினைத் தாம் பெறுவர் ஆயின், இழுக்கு எனைத்தும் செய்குறாப் பாணி சிறிதே, அச் சின்மொழியார் கை உறாப் பாணி பெரிது. |
உரை |
363. | ‘எறி’ என்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை அட்டில் புகாதாள் அரும் பிணி; அட்டதனை உண்டி உதவாதாள் இல் வாழ் பேய்;-இம் மூவர் கொண்டானைக் கொல்லும் படை. |
உரை |
364. | ‘கடி’ எனக் கேட்டும், கடியான்; வெடிபட ஆர்ப்பது கேட்டும், அது தெளியான்; பேர்த்தும் ஓர் இல் கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல், என்பவே, கல் கொண்டு எறியும் தவறு. |
உரை |
365. | தலையே, தவம் முயன்று வாழ்தல்; ஒருவர்க்கு இடையே, இனியார்கண் தங்கல்; கடையே, புணராது என்று எண்ணிப் பொருள் நசையால், தம்மை உணரார் பின் சென்று நிலை. |
உரை |
366. | கல்லாக் கழிப்பர், தலையாயார், நல்லவை துவ்வாக் கழிப்பர், இடைகள்; கடைகள், ‘இனிது உண்ணேம்! ஆரப் பெறேம் யாம்!’ என்னும் முனிவினால் கண்பாடு இலர். |
உரை |
367. | செந்நெல்லால் ஆய செழு முளை மற்றும் அச் செந்நெல்லே ஆகி விளைதலால்,-அந் நெல் வயல் நிறையக் காய்க்கும் வள வயல் ஊர!- மகன் அறிவு, தந்தை அறிவு. |
உரை |
368. | உடைப் பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டு, புடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருகி, கடைக்கால் தலைக்கண்ணது ஆகி, குடைக் கால்போல் கீழ் மேலாய் நிற்கும், உலகு! |
உரை |
369. | இனியார் தம் நெஞ்சத்து நோய் உரைப்ப, அந் நோய் தணியாத உள்ளம் உடையார்,-மணி வரன்றி வீழும் அருவி விறல் மலை நல் நாட!- வாழ்வின், வரை பாய்தல் நன்று. |
உரை |
370. | புதுப் புனலும், பூங்குழையார் நட்பும், இரண்டும், விதுப்பு அற நாடின், வேறு அல்ல;-புதுப் புனலும் மாரி அறவே அறுமே; அவர் அன்பும் வாரி அறவே அறும். |
உரை |