பன்னெறி
 
361. மழை திளைக்கும் மாடம் ஆய், மாண்பு அமைந்த காப்பு ஆய்,
இழை விளக்கு நின்று இமைப்பின் என் ஆம், விழைதக்க
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்?
காண்டற்கு அரியது ஓர் காடு!
உரை
   
362. வழுக்கு எனைத்தும் இல்லாத வாள்வாய்க் கிடந்தும்,
இழுக்கினைத் தாம் பெறுவர் ஆயின், இழுக்கு எனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே, அச் சின்மொழியார்
கை உறாப் பாணி பெரிது.
உரை
   
363. ‘எறி’ என்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும் பிணி; அட்டதனை
உண்டி உதவாதாள் இல் வாழ் பேய்;-இம் மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.
உரை
   
364. ‘கடி’ எனக் கேட்டும், கடியான்; வெடிபட
ஆர்ப்பது கேட்டும், அது தெளியான்; பேர்த்தும் ஓர்
இல் கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல், என்பவே,
கல் கொண்டு எறியும் தவறு.
உரை
   
365. தலையே, தவம் முயன்று வாழ்தல்; ஒருவர்க்கு
இடையே, இனியார்கண் தங்கல்; கடையே,
புணராது என்று எண்ணிப் பொருள் நசையால், தம்மை
உணரார் பின் சென்று நிலை.
உரை
   
366. கல்லாக் கழிப்பர், தலையாயார், நல்லவை
துவ்வாக் கழிப்பர், இடைகள்; கடைகள்,
‘இனிது உண்ணேம்! ஆரப் பெறேம் யாம்!’ என்னும்
முனிவினால் கண்பாடு இலர்.
உரை
   
367. செந்நெல்லால் ஆய செழு முளை மற்றும் அச்
செந்நெல்லே ஆகி விளைதலால்,-அந் நெல்
வயல் நிறையக் காய்க்கும் வள வயல் ஊர!-
மகன் அறிவு, தந்தை அறிவு.
உரை
   
368. உடைப் பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டு,
புடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருகி,
கடைக்கால் தலைக்கண்ணது ஆகி, குடைக் கால்போல்
கீழ் மேலாய் நிற்கும், உலகு!
உரை
   
369. இனியார் தம் நெஞ்சத்து நோய் உரைப்ப, அந் நோய்
தணியாத உள்ளம் உடையார்,-மணி வரன்றி
வீழும் அருவி விறல் மலை நல் நாட!-
வாழ்வின், வரை பாய்தல் நன்று.
உரை
   
370. புதுப் புனலும், பூங்குழையார் நட்பும், இரண்டும்,
விதுப்பு அற நாடின், வேறு அல்ல;-புதுப் புனலும்
மாரி அறவே அறுமே; அவர் அன்பும்
வாரி அறவே அறும்.
உரை