தொடக்கம் | ||
கற்புடைமகளிர்
|
||
381. | அரும் பெறல் கற்பின் அயிராணி அன்ன பெரும் பெயர்ப் பெண்டிர் எனினும், விரும்பிப் பெறு நசையால், பின்நிற்பார் இன்மையே பேணும் நறு நுதலாள்-நன்மைத் துணை. |
உரை |
382. | குட நீர் அட்டு உண்ணும் இடுக்கண் பொழுதும், கடல் நீர் அற உண்ணும் கேளிர் வரினும், கடன் நீர்மை கையாறாக் கொள்ளும் மட மொழி மாதர்-மனை மாட்சியாள். |
உரை |
383. | நால் ஆறும் ஆறாய், நனி சிறிதாய், எப் புறனும் மேல் ஆறு மேல் உறை சோரினும், மேலாய வல்லாளாய், வாழும் ஊர் தற் புகழும் மாண் கற்பின் இல்லாள் அமைந்ததே-இல். |
உரை |
384. | கட்கு இனியாள், காதலன் காதல் வகை புனைவாள் உட்கு உடையாள், ஊராண் இயல்பினாள், உட்கி இடன் அறிந்து ஊடி இனிதின் உணரும் மடமொழி மாதராள்-பெண். |
உரை |
385. | எஞ்ஞான்றும், எம் கணவர் எம் தோள்மேல் சேர்ந்து எழினும், அஞ் ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; எஞ்ஞான்றும், என்னை, கெழீஇயினர் கொல்லோ, பொருள் நசையால் பல் மார்பு சேர்ந்து ஒழுகுவார்! |
உரை |
386. | உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூல் அற்றால்; வள்ளன்மை பூண்டான்கண் ஒண் பொருள்; தெள்ளிய ஆண்மகன் கையில் அயில் வாள் அனைத்துஅரோ;- நாணுடையாள் பெற்ற நலம். |
உரை |
387. | கருங் கொள்ளும், செங் கொள்ளும், தூணிப் பதக்கு என்று ஒருங்கு ஒப்பக் கொண்டானாம், ஊரன்;-ஒருங்கு ஒவ்வா நல் நுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது, என்னையும் தோய வரும்! |
உரை |
388. | கொடியவை கூறாதி;-பாண!-நீ கூறின், அடி பைய இட்டு ஒதுங்கிச் சென்று, துடியின் இடக்கண் அனையம் யாம், ஊரற்கு; அதனால், வலக் கண் அனையார்க்கு உரை. |
உரை |
389. | சாய்ப் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன்மீது ஈப் பறக்க நொந்தேனும் யானேமன்! தீப் பறக்கத் தாக்கி முலை பொருத தண் சாந்து அணி அகலம் நோக்கி இருந்தேனும் யான்! |
உரை |
390. | ‘அரும்பு அவிழ் தாரினான் எம் அருளும்’ என்று பெரும் பொய் உரையாதி;-பாண!-கரும்பின் கடைக் கண் அனையம் யாம் ஊரற்கு; அதனால், இடைக் கண் அனையார்க்கு உரை. |
உரை |