தொடக்கம் | ||
காமநுதலியல்
|
||
391. | முயங்காக்கால், பாயும் பசலை; மற்று ஊடி உயங்காக்கால், உப்பு இன்றாம் காமம்;-வயங்கு ஓதம் நில்லாத் திரை அலைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப!- புல்லாப் புலப்பது ஓர் ஆறு. |
உரை |
392. | தம் அமர் காதலர் தார் சூழ் அணி அகலம் விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு, இம்மெனப் பெய்ய எழிலி முழங்கும் திசைஎல்லாம் நெய்தல் அறைந்தன்ன நீர்த்து. |
உரை |
393. | கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய மம்மர் கொள் மாலை, மலர் ஆய்ந்து, பூத் தொடுப்பாள், கைம் மாலை இட்டுக் கலுழ்ந்தாள், ‘துணை இல்லார்க்கு இம் மாலை என் செய்வது!’ என்று. |
உரை |
394. | செல் சுடர் நோக்கிச் சிதர் அரிக் கண் கொண்ட நீர் மெல் விரல் ஊழ் தெறியா, விம்மி, தன் மெல் விரலின், நாள் வைத்து, நம் குற்றம் எண்ணும்கொல், அந்தோ! தன் தோள் வைத்து அணைமேல் கிடந்து! |
உரை |
395. | கண் கயல் என்னும் கருத்தினால், காதலி பின் சென்றது அம்ம, சிறு சிரல்! பின் சென்றும், ஊக்கி எழுந்தும், எறிகல்லா-ஒண் புருவம் கோட்டிய வில் வாக்கு அறிந்து. |
உரை |
396. | அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம் மருங்கிற்கு, அன்னோ! பரற் கானம் ஆற்றின கொல்லோ-அரக்கு ஆர்ந்த பஞ்சி கொண்டு ஊட்டினும், ‘பையென, பையென!’ என்று, அஞ்சி, பின் வாங்கும் அடி! |
உரை |
397. | ஓலைக் கணக்கர் ஒலி அடங்கு புன் செக்கர் மாலைப்பொழுதில், மணந்தார் பிரிவு உள்ளி, மாலை பரிந்திட்டு அழுதாள்-வன முலைமேல் கோலம் செய் சாந்தம் திமிர்ந்து. |
உரை |
398. | ‘ “கடக்க அருங் கானத்து, காளைபின், நாளை நடக்கவும் வல்லையோ?’’ என்றி-சுடர்த்தொடீஇ!- பெற்றான் ஒருவன் பெருங் குதிரை அந் நிலையே கற்றான், அஃது ஊருமாறு?’ |
உரை |
399. | ‘முலைக்கண்ணும், முத்தும், முழு மெய்யும், புல்லும் இலக்கணம் யாதும் அறியேன்; கலைக் கணம் வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும், என் பூம்பாவை செய்த குறி. |
உரை |
400. | கண் மூன்று உடையானும், காக்கையும், பை அரவும், என் ஈன்ற யாயும், பிழைத்தது என்?-பொன் ஈன்ற கோங்கு அரும்பு அன்ன முலையாய்!-பொருள்வயின் பாங்கனார் சென்ற நெறி! |
உரை |