தொடக்கம் | ||
1. | கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும் சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க, கூறல்லவற்றை விரைந்து! |
உரை |
2. | பறை பட வாழா, அசுணமா; உள்ளம் குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்து நெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச் சொல் பட்டால், சாவதாம் சால்பு. |
உரை |
3. | மண்ணி அறிப, மணி நலம்; பண் அமைத்து ஏறியபின் அறிப, மா நலம்; மாசு அறச் சுட்டு அறிப, பொன்னின் நலம் காண்பார்; கெட்டு அறிப, கேளிரான் ஆய பயன். |
உரை |
4. | கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள் பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார், நல் ஆள் பிறக்கும் குடி? |
உரை |
5. | கல்லில் பிறக்கும், கதிர் மணி; காதலி சொல்லில் பிறக்கும், உயர் மதம்; மெல்லென் அருளில் பிறக்கும், அற நெறி; எல்லாம் பொருளில் பிறந்துவிடும். |
உரை |
6. | திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக் கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும், போற்றாதார் முன்னர்ச் செலவு. |
உரை |
7. | ‘கள்வம்!’ என்பார்க்கும் துயில் இல்லை; காதலிமாட்டு உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ‘ஒண் பொருள் செய்வம்!’ என்பார்க்கும் துயில் இல்லை; அப் பொருள் காப்பார்க்கும் இல்லை, துயில். |
உரை |
8. | கற்றார்முன் தோன்றா, கழிவு இரக்கம்; காதலித்து ஒன்று உற்றார்முன் தோன்றா, உறா முதல்; தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம் வெகுண்டார்முன் தோன்றா கெடும். |
உரை |
9. | நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்; குளத்துக்கு அணி என்ப, தாமரை; பெண்மை நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி தான் செல் உலகத்து அறம். |
உரை |
10. | கந்தில் பிணிப்பர், களிற்றை; கதம் தவிர, மந்திரத்தினால் பிணிப்பர், மா நாகம்; கொந்தி, இரும்பின் பிணிப்பர், கயத்தை; சான்றோரை நயத்தின் பிணித்துவிடல்! |
உரை |