தொடக்கம் | ||
21. | மொய சிதைக்கும், ஒற்றுமை இன்மை; ஒருவனைப் பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை; பெய்த கலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும், கூடார்கண் கூடிவிடின். |
உரை |
22. | புகழ் செய்யும், பொய்யா விளக்கம்; இகழ்ந்து ஒருவன் பேணாமை செய்வது பேதைமை; காணாக் குருடராச் செய்வது மம்மர்; இருள் தீர்ந்த கண்ணராச் செய்வது, கற்பு. |
உரை |
23. | மலைப்பினும், வாரணம் தாங்கும்; குழவி, அலைப்பினும், ‘அன்னே!’ என்று ஓடும்; சிலைப்பினும், நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார் உடன் உறையும் காலமும் இல். |
உரை |
24. | நகை நலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த அவை நலம் அன்பின் விளங்கும்; விசை மாண்ட தேர் நலம் பாகனால் பாடு எய்தும்; ஊர் நலம் உள்ளானால் உள்ளப்படும். |
உரை |
25. | அஞ்சாமை அஞ்சுக! ஒன்றின், தனக்கு ஒத்த எஞ்சாமை, எஞ்சும் அளவு எல்லாம்! நெஞ்சு அறியக் கோடாமை, கோடி பொருள் பெறினும்! நாடாமை நட்டார்கண் விட்ட வினை! |
உரை |
26. | அலைப்பான், பிறிது உயிரை ஆக்கலும் குற்றம்; விலைப்பாலின் கொண்டு, ஊன் மிசைதலும் குற்றம்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்; கொலைப்பாலும் குற்றமே ஆம். |
உரை |
27. | கோல் நோக்கி வாழும், குடி எல்லாம்; தாய் முலையின் பால் நோக்கி வாழும், குழவிகள்; வானத் துளி நோக்கி வாழும், உலகம்; உலகின் விளி நோக்கி இன்புறூஉம், கூற்று. |
உரை |
28. | கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக, புற்கம் தீர்ந்து, இவ் உலகில் கோள் உணரும்; கோள் உணர்ந்தால், தத்துவம் ஆன நெறி படரும்; அந் நெறியே இப்பால் உலகத்து இசை நிறீஇ, உப்பால் உயர்ந்த உலகம் புகும். |
உரை |
29. | குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர் பழித்துழி நிற்பது பாவம்; அழித்துச் செறுவுழி நிற்பது காமம்; தனக்கு ஒன்று உறுவுழி நிற்பது அறிவு. |
உரை |
30. | திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு; கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும் இன்மையின் இன்னாதது இல்லை; ‘இலம்!’ என்னும் வன்மையின் வன்பாட்டது இல். |
உரை |