தொடக்கம் | ||
81. | நலனும் இளமையும் நல்குரவின்கீழ்ச் சாம்; குலனும் குடிமையும் கல்லாமைக்கீழ்ச் சாம்; வளம் இல் குளத்தின்கீழ் நெல் சாம்; பரம் அல்லாப் பண்டத்தின்கீழ்ச் சாம், பகடு. |
உரை |
82. | நல்லார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச் செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; அல்லாக் கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்து உடையார்க்கும் எவ் ஊரும் ஊர். |
உரை |
83. | கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம்; மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்; அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே, இல் இருந்து தீங்கு ஒழுகுவாள். |
உரை |
84. | நீரான் வீறு எய்தும் விளை நிலம்; நீர் வழங்கும் பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம்; கொண்டு ஆளும் நாட்டான் வீறு எய்துவர் மன்னவர்; கூத்து ஒருவன் பாடலான் பாடு பெறும். |
உரை |
85. | ஒன்று ஊக்கல், பெண்டிர் தொழில் நலம்; என்றும் அறன் ஊக்கல், அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும் நாடு ஊக்கல், மன்னர் தொழில் நலம்; கேடு ஊக்கல், கேளிர் ஒரீஇவிடல். |
உரை |
86. | கள்ளாமை வேண்டும், கடிய வருதலான்; தள்ளாமை வேண்டும், தகுதி உடையன; நள்ளாமை வேண்டும், சிறியரோடு; யார்மாட்டும் கொள்ளாமை வேண்டும், பகை. |
உரை |
87. | பெருக்குக, நட்டாரை நன்றின்பால் உய்த்து! தருக்குக, ஒட்டாரைக் காலம் அறிந்தே! அருக்குக, யார்மாட்டும் உண்டி! சுருக்குக, செல்லா இடத்துச் சினம்! |
உரை |
88. | மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான் பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய நாணின் வரை நிற்பர் நற் பெண்டிர்; நட்டு அமைந்த தூணின்கண் நிற்கும் களிறு. |
உரை |
89. | மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடு வென்றி அறிப, அரசர்கள்; என்றும் வணங்கல் அணிகலம், சான்றோர்க்கு; அஃது அன்றி, அணங்கல் வணங்கின்று, பெண். |
உரை |
90. | பட்டாங்கே பட்டு ஒழுகும், பண்பு உடையாள்; காப்பினும், பெட்டாங்கு ஒழுகும், பிணையிலி; முட்டினும், சென்றாங்கே சென்று ஒழுகும், காமம்; கரப்பினும், கொன்றான்மேல் நிற்கும், கொலை. |
உரை |