தொடக்கம் |
|
|
1. | அரிது அவித்து, ஆசு இன்று உணர்ந்தவன் பாதம், விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து, உரியதனில் கண்டு உணர்ந்தார் ஓக்கமே-போல, பெரியதன் ஆவி பெரிது. | |
|
உரை
|
|
|
|
|
2. | கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன் சொல்லுங்கால், சோர்வு படுதலால், நல்லர்! வினா முந்துறாத உரை இல்லை;-இல்லை, கனா முந்துறாத வினை. | |
|
உரை
|
|
|
|
|
3. | கல்வியான் ஆய கழி நுட்பம், கல்லார் முன் சொல்லிய நல்லவும், தீய ஆம்,-எல்லாம் இவர் வரை நாட!-தமரை இல்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு. | |
|
உரை
|
|
|
|
|
4. | கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண் வேட்கை அறிந்து, உரைப்பார், வித்தகர்;-வேட்கையால் வண்டு வழிப்படரும் வாள் கண்ணாய்!-தோற்பன கொண்டு புகாஅர், அவை. | |
|
உரை
|
|
|
|
|
5. | புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்;-நலம் மிக்க பூம் புனல் ஊர!-பொது மக்கட்கு ஆகாதே; பாம்பு அறியும் பாம்பின கால். | |
|
உரை
|
|
|
|
|
6. | ஈனுலகத்துஆயின், இசை பெறூஉம்; அஃது இறந்து, ஏனுலகத்துஆயின், இனிது, அதூஉம்; தான் ஒருவன் நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும் வேள் வாய் கவட்டை நெறி. | |
|
உரை
|
|
|
|
|
7. | ஆஅம் எனக்கு எளிது’ என்று உலகம் ஆண்டவன், மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;- தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே, தா அம் தர வாரா நோய். | |
|
உரை
|
|
|
|
|
8. | எந் நெறியானும் இறைவன் தன் மக்களைச் செந் நெறிமேல் நிற்பச் செயல் வேண்டும்; அந் நெறி- மான் சேர்ந்த நோக்கினாய்!-ஆங்க; அணங்கு ஆகும், தான் செய்த பாவை தனக்கு. | |
|
உரை
|
|
|
|
|
9. | திருந்தாய் நீ, ஆர்வத்தை! தீமை உடையார், ‘வருந்தினார்’ என்றே வயப்படுவது உண்டோ? அரிந்து அரிகால் பெய்து அமையக் கூட்டியக்கண்ணும், பொருந்தா மண், ஆகா, சுவர். | |
|
உரை
|
|
|
|
|
10. | பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும், சென்று, திரிவு இன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள் ஒருவரோடு ஒன்றி ஒருப்படாதாரே, இரு தலைக் கொள்ளி என்பார். | |
|
உரை
|
|
|
|